குறைந்த நேரம் தூக்கம், அல்லது தூங்குவதற்கு சிரமம் என்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, போன்ற நோய்களை சந்திக்க நேரிடும் என ஆய்வொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட குறித்த ஆய்வில், 4,87,200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது அதில் 11 சதவீதம் தூங்க சிரமப்படுவதாகவும், 10 சதவீதம் பேர் லேட்டாக தூங்கினாலும் சீக்கிரம் எழுந்துவிடுவதாகவும், 2 சதவீதம் சரியான தூக்கம் இல்லாததால் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் பின் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில், 1,30032 பேருக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் ஆரம்ப நிலையில் தெரியாது என்றும் அதன் தீவிரம் அதிகரிக்கும்போதே வெளிப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் அதற்குரிய சிகிச்சைகள், தெரப்பிகளை எடுத்துக்கொள்வது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.