Advertisment

'தாம்பத்யம்… இந்த 5 ராஜ உறுப்புகளும் சரியாக இயங்கினால்தான்..!' மருத்துவர் விளக்கம்

இந்த 5 ராஜ உறுப்புகளும் சரியாக இயங்கினால்தான்... தாம்பத்யம் இனியமாக இருக்கும் என்று மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தாம்பத்யம்… இந்த 5 ராஜ உறுப்புகளும் சரியாக இயங்கினால்தான்..!' மருத்துவர் விளக்கம்

பெண்கள் விரும்புவது நறுமணப் பூக்களைத் தான். காகிதப்பூக்களை அல்ல. நீங்கள் நறுமண பூவா? காகிதப்பூவா? சிந்தித்துப் பாருங்கள்

Advertisment

ஆண்மை குறைவு

ஆண்மை குறஒவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு, ஒரு நோய் என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர். 5 காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஆண்மை பலம் என்பது, ஆன்ம பலம் ஆகும். இது இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடையாகும். ஆண்மை குறைவு என்பது ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட நோயல்ல. முழு உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டதாகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மிகப் பெரிய இன்பமாகக் கருதும் தாம்பத்ய உறவை, சிற்றின்பம் என்று தான் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அந்த சிற்றின்பம் கூட அனுபவிக்க முடியாத கானல் நீராகி விட்டது. காரணம், அறியாமையாலும், தவறான பழக்கவழக்கங்களாலும், இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கை முறைகளாலும் தன் வாலிப சக்தியை இழந்து பரிதவிக்கிறார்கள்.

ஆண்மை குறைந்த மனிதரின் சுபாவங்கள்

தன் இயலாமையை எண்ணி எண்ணி வேதனையுடன் வாழ்பவர்கள் பலர்.

தன் துணையை திருப்திப்படுத்த முடியாமல் வெட்கி தலைகுனிபவர்கள் பலர்.

சந்தோஷம் இல்லாத தாம்பத்யத்தால் வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் பலர்.

ஆண்மை குறைவிற்கான காரணம் தெரியாமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லாமல் ஏமாந்து போனவர்கள் இன்னும் பலர்.

ஒரு மனிதனிடம் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் ஆண்மை சக்தி இல்லையென்றால் அவன் வெறும் காகிதப்பூ தான், காகிதப்பூ எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்கு மணமும் இல்லை, மதிப்பும் இல்லை. அதுபோல, ஒரு மனிதன் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஆண்மை சக்தி இல்லையென்றால், கட்டிய மனைவி கூட மதிக்க மாட்டாள். ஏனென்றால்.

பெண்கள் விரும்புவது நறுமணப் பூக்களைத் தான். காகிதப்பூக்களை அல்ல. நீங்கள் நறுமண பூவா? காகிதப்பூவா? சிந்தித்துப் பாருங்கள்

ஆண்மைக்குறைவின் காரணங்களும் நிவர்த்திகளும்

ஆண்மை சக்தி என்பது முழு உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்டது. இதில் ராஜ உறுப்புகள் என்ற மூளை, இருதயம், கல்லீரல், விதைப்பை, நரபு மண்டலம் என்ற 5 உறுப்புகளும் முக்கியமானதாகும். இதில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

ஆண்மையின் கோட்பாடுகள்

சிற்றின்ப ஆசை உள்ளத்தில் ஏற்பட்டு, அந்த எண்ணம் மூளைக்கு அனுப்பப்படுகிறது.

  1. மூளை:



    மூளையானது, சிற்றின்ப ஆசையை நிறைவேற்ற, மற்ற உறுப்புகளுக்கு கட்டளையிடுகின்றது.

  2. இருதயம்:



    மூளையின் கட்டளைக்கேற்ப, இருதயம் வேகமாக செயல்பட்டு அதிகப்படியான ரத்தத்தை பம்ப் செய்து ஆணு உறுப்புக்கு அனுப்புகிறது.

  3. கல்லீரன்:

அதே போல் கல்லீரலின் செய்ல்பாடுகளால் உற்பத்தியாகும் பித்த வாய்வும், ஆணுறுப்புக்கு அனுப்பப்படும்போது, இருதயம் அனுப்பும் இரத்தமும், கல்லீரல் அனுப்பும் பித்த வாய்வும் ஒரு சேர ஆணுறுப்புக்குள் செல்லும்போது, ஹைட்ராலிக் போல ஆணுறுப்பு விம்மி எழுகிறது.

  1. விதைப்பை:

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவும், ஆணுறுப்புக்கு அனுப்பப்படும்போது, இருதயம் அனுப்பும் இரத்தமும், கல்லீரல் அனுப்பும் பித்த வாய்வும் ஒரு சேர ஆணுறுப்புக்குள் செல்லும்போது, ஹைட்ராலுக் போல ஆணுற்ப்பு விம்மி எழுகிறது.

  1. நரம்பு மண்டலம்:

ஆண்மை சக்திக்கு மிக மிக இன்றியமையாது நரம்பு மண்டலமாகும். மூளையிலிருந்து அனுப்பப்படும் கட்டளைகள் மின் காந்த அலைகள் மூலம் மற்ற உறுப்புகளுக்கு அனுப்புவதும் இருதயம், கல்லீரல், விதைப்பை அனுப்பும், ரத்தம், பித்த வாயு, விந்தணு, போன்றவைகளை ஆணுறுப்புக்கு எடுத்துச் சென்று, ஒரு விதமான கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தி, ஒரு மனிதனை தாம்பத்ய உறவுக்கு தயார்படுத்த உந்து சக்தியாக செயல்படுவது நரம்பு மண்டலமாகும். இப்படி இந்த 5 ராஜ உறுப்புகளும் ஒரு சேர செயல்படும்போது தான் முழுமையான ஆண்மை சக்தி ஏற்படுகிறது. இதில் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஆண்மை குறைவு ஏற்படும்.

ஆண்மைக் குறைவின் அறிகுறிகள்

மூளை:

மூளையின் குறைபாடுகளால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் சிற்றின்ப ஆசையே இருக்காது. எப்போதும் சோம்பலாக இருப்பார்கள். ஆணுறுப்பு எழுச்சி இல்லாமல் தளர்ந்து சிறுத்து விடும்.

இருதயம்:

இருதயத்தினுடைய பாதிப்பினால் ஆண்மை குறைவு ஏற்பட்டால், ஆணுறுப்பு மெலிந்து சிறுத்து இருக்கும், முழு விறைப்பு சக்தி இருக்காது. உறவில் ஈடுபடும்போது அதிக மூச்சு வாங்கும். துரிதமாக சக்தி வெளிப்பட்டு, மிகுந்த களைப்பும், பலகீனமும் ஏற்படும்.

ஈரல்:

ஈரலின் பாதிப்பினால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் ஆணுறுப்பு எழுச்சியில்லாமல் சோர்ந்து இருக்கும். சில நேரம் சக்தி இருந்தாலும், உறவில் ஈடுபடும்போதே உணர்ச்சி குறைந்து உறுப்பு சிறுத்து விடும். தாம்பத்திய உரவு ஆரம்பித்தவுடன் ஒரு சில நொடிகளிலேயே சக்தி வெளிப்பட்டு சோர்ந்து பலகீனமாகி விடுவார்கள்.

விதைப்பை:

விதைப்பையின் பலகீனத்தால் ஆண்மை குறைவு ஏற்பட்டால், விந்து உற்பத்தி குறைவாக இருக்கும். விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருக்கும். விந்துவின் அடர்த்தி குறைந்தும் நீர்த்தும் இருக்கும். உயிரணுக்களின் நீந்தும் சக்தி குறைவாக இருக்கும். உடலுறவில் இன்பமோ உணர்ச்சியோ இருக்காது. ஆணுறுப்பு சிறுத்து விடும். உச்சகட்டம் என்பதே ஏற்படாது. இப்படிப்பட்ட ஆண்மை குறைவுள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியமே இருக்காது.

நரம்பு மண்டலம்:

நரம்பு மண்டலத்தின் பாதிப்பினால், ஆண்மை குறைவு ஏற்பட்டால், ஆணுறுப்பு சோர்ந்து மெலிந்து இருக்கும். உறுப்பின் அடிப்பகுதி சிறுத்தும், நுனிப்பகுதி பெருத்தும், கோணலாகவும் வளைந்தும் இருக்கும். விறைப்புத்தன்மை இல்லாமல் ஆணுறுப்பு மிகவும் சிறியதாக இருக்கும். உடல் உறவு ஆரம்பித்தவுடன் இன்பமோ உச்சகட்டமோ இல்லாமல் ஒரு சில நொடிகளில் சக்தி வெளிப்பட்டு விடும். இப்படிப்பட்ட 5 காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது.

இதில் எந்த உறுப்புகளின் பாதிப்பினால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்று ஆராய்ந்து, அதற்கான மருந்துகளை உட்கொண்டால் தான், ஆண்மை சக்தி கிடைக்கும். ஆண்மை குறைவிற்கான காரணங்களை ஆராயாமல், ஆண்மை சக்தி கிடைக்கும் என்ற வெற்று விளம்பரங்களைப் பார்த்து, கண்ட கண்ட மருந்துகளை உட்கொள்வதால் இருக்கும் ஆண்மையையும் இழந்து வாழ்க்கையே இருண்டு விடும்.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிபுணர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment