Advertisment

முருங்கை முதல் வாழைப்பூ வரை... என்ன நன்மை? எப்படி பயன்படுத்துவது?

தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும் டெங்கு நோயாளிகளுக்கும், இரண்டாம் வகை நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அமிர்தவல்லி இலைகள் பயனுள்ளதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
முருங்கை முதல் வாழைப்பூ வரை... என்ன நன்மை? எப்படி பயன்படுத்துவது?

நம் வாழ்வில் மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாக இருந்து வரும் இந்த மூலிகைகளை நம்மில் பெரும்பாலானோர் கண்டு கொள்வதே இல்லை. உடனடியாக ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் மூலிகைகளின் துணையோடும் அவற்றை சரி செய்யலாம். உங்களுக்கு அதிகம் பயன்படும் பத்து மூலிகையின் பயன்களும், அவற்றை பயன்படுத்தும் விதத்தையும் உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். நிச்சயம் பின்பற்றுங்கள். மூலிகைகளால் நல்ல பலன் உண்டாகும்.

Advertisment
  1. அஸ்வகந்தா :

அமினோ அமிலங்கள், பெப்டைடுகள், லிப்பிடுகள் மற்றும் நியூக்ளிக் அமிலம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளதால், அஸ்வகந்தா உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்களில் நிறைந்துள்ளது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அஸ்வகந்தா செடியின் வேர், சிகிச்சை பலன்களைக் கொண்டிருப்பதாகவும், நரம்பு மண்டலத்தில் அமைதியான விளைவை ஏற்படுத்தக் கூடியது எனவும் கூறப்படுகிறது. இதனால் தான் மனச்சோர்வு, பதட்டம், சோர்வு, மன அழுத்தத்தால் தூக்கமின்மை மற்றும் நரம்பு சோர்வு ஆகியவற்றின் சிகிச்சையில், அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா, இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும், தசை செல்களில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

publive-image
  1. வாழைப்பூ :

நீரிழிவு நோயைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் விரும்பும் மக்களுக்கு, வாழைப்பூவின் கொத்துகளின் முடிவில் தொங்கும் மொட்டு வடிவ மெரூன் அல்லது ஊதா நிற பூக்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமன் செய்து நன்மை பயக்க வல்லது. வாழைப்பூவில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இது, உயிரணு ஆரோக்கியத்திற்கும், இறந்த செல்களை புதுப்பிப்பதற்கும் உதவுகிறது. இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன. மேலும், வளர்சிதை மாற்றத்திற்கு தூண்டுகிறது. இனப்பெருக்க உறுப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் வாழைப்பூ சிறந்த உணவாகும்.

publive-image
  1. அமிர்தவல்லி இலை :

அமிர்தவல்லி இலையை காபி அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ, தூள் அல்லது சாறு வடிவிலோ உட்கொள்ளலாம். ஆன்டெல்மிண்டிக், ஆர்த்ரைடிக், ஆன்டி-பீரியடிக், பைரெடிக், ப்ரூரிடிக் எதிர்ப்பு, ரத்த சுத்திகரிப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு என பல நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. கூடுதலாக, அமிர்தவல்லி இலை, இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையையும் சீராக அதிகரிக்கிறது. குறிப்பாக, தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும் டெங்கு நோயாளிகளுக்கும், இரண்டாம் வகை நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அமிர்தவல்லி இலைகள் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரத்தச் சர்க்கரைக் குறைக்கவும் பயன்படுகிறது.

publive-image
  1. முருங்கை இலைகள் :

முருங்கை இலைப் பொடி, பொதுவாக தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இதில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை உள்ளடக்கி உள்ளது. ஆனால், இது இப்போது எடை இழப்புக்கு உதவுவதற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலைப் பொடியை தேநீரிலும் கலந்து குடிக்கலாம்.

publive-image
  1. சக்கரவர்த்தி கீரை :

சக்கரவர்த்தி கீரை, வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் செறிந்து காணப்படுகிறது. இந்த கீரையில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி 6 நிறைந்துள்ளது. மேலும், குறைவான கலோரிகளை கொண்டது. எடை குறைப்பவர்களுக்கும் ஏற்றது. சக்கரவர்த்தி இலைகளில் அமினோ அமிலங்களின் செறிவு உள்ளது. இது, உயிரணு உருவாக்கம் மற்றும் செல்கள் செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சக்கரவர்த்தி கீரையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் செரிமான பிரச்சனைக்கு தீர்வாகிறது.

publive-image
  1. திரிபாலா :

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையான திரிபாலா, வளர்சிதை மாற்றம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக்க உதவுகிறது. இது உடலை குளிர்வித்து, உடலில் உள்ள அனைத்து கபத்தையும் சமன் செய்கிறது. திரிபால சுர்னாவை ஒவ்வொரு இரவும் படுக்கைக்கு முன் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டு வரலாம்.

publive-image
  1. அதிமதுரம் :

வறட்டு இருமல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியைத் தவிர்ப்பதற்கு அதிமதுர குச்சிகளை மென்று சாப்பிடலாம். இது, தொண்டை ஈரப்பதமாக இருக்க உதவுகிறது. எலுமிச்சை சாறுடன் இணைந்து, சருமத்தை கட்டுப்படுத்தும் பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதிமதுரம் முடி மற்றும் உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

publive-image
  1. கலாக்காய் :

கலாக்காய் இரத்த சோகை நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி உள்ளது. இது திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கலாக்காய் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. கல்லீரலில் பித்தத்தின் அதிகப்படியான சுரப்பை நிறுத்துகிறது. கலாக்காய் வலி நிவாரணி மருந்தாகவும் செயல்படுகிறது. வயிற்றுப்போக்கின் போது உடலை ஆறுதல்படுத்துகிறது, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சளி, இருமலை எதிர்த்துப் போராட உதவுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

publive-image
  1. நாவல் பழம் :

நாவல் பழம் ஒரு பசுமையான வெப்பமண்டல மரமாகும். இது இமயமலை, இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக வளர்கிறது. இதன் இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும், வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அதே நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மலச்சிக்கலுக்கு மருந்தாகவும், ஒவ்வாமைகளையும் நீக்குகிறது.

publive-image
  1. பூசணிப் பூ :

பூசணிப் பூவில் விந்தணு உருவாக்கத்திற்கு அவசியமான வைட்டமின் பி 9 உள்ளது. இது பார்வையை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ அதிகப்படியாக உள்ளது. இது உங்கள் கண்களை ஒளி மாற்றங்களுடன் சரிசெய்ய உதவுகிறது. கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கிறது, மேலும் இரவில் பார்வை திறனை மேம்படுத்துகிறது. மேலும், பூசணி பூவில் போதுமான அளவு காணப்படும் பாஸ்பரஸ் வளர்ச்சிதை மாற்ற செயல்முறையில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. மேலும், எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கிறது. இது பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஒரு பிரபலமான உணவாகும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Health Tips Siddha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment