Advertisment

புதிய நீரிழிவு மருந்துகள்.. யாருக்கு பலன் கொடுக்கும்?

நீரிழிவு நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை முறையை எடுப்பது அவசியம். இதில் இருந்து தற்காத்துக் கொள்ள சரியான நேரத்தில் சாப்பிடுதல், உடற்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை அவசியமாகிறது.

author-image
WebDesk
New Update
New drugs for diabetes

மருத்துவர் அனுப் மிஸ்ரா

மருத்துவ சந்தையில் புதிதாக வந்துள்ள நீரிழிவு நோய் மருந்துகள் நீரிழிவு பாதிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றாக வேலை செய்யுமா? அல்லது சிலருக்கு மட்டும்தான் பலன் கொடுக்குமா என்பது குறித்து ஃபோர்டிஸ் சிடிஓசி மருத்துவமனை நீரிழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் மையத்தின் தலைவர் மருத்துவர் அனுஷ் மிஸ்ரா கூறுவதை பார்க்கலாம்.

உடலில் இன்சுலின் அளவு குறைந்து காணப்படுவதால் சர்க்கரை வியாதி என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இந்தப் பாதிப்பின் அறிகுறியாக அடிக்கடி சீறுநீர் கழித்தல், அதீத பசித்தல் உணவு, தண்ணீர் அதிகமாக குடிப்பது, களைப்பாக உணர்தல், ஆறாத புண், பிறப்புறுப்பு இன்பெக்ஷன், உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல், எடை குறைதல் அல்லது அதிகரித்தல், கால் மரத்துப் போதல் மற்றம் மங்கலான பார்வை ஆகிய அறிகுறிகள் உள்ளன.

Advertisment

இந்த நீரிழிவு நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை முறையை எடுப்பது அவசியம். இதில் இருந்து தற்காத்துக் கொள்ள சரியான நேரத்தில் சாப்பிடுதல், உடற்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியன அவசியமாகிறது.

மேலும் கடந்த கால மருந்துகள் ஜப்பானிய கார்கள் போல் நம்பகமான நன்றாக வேலை செய்தன. ஆனால் தற்போது சந்தையில் உலாவும் புதிய நீரிழிவு மருந்துகள் உடலில் பெரிதளவு வேலை செய்கின்றன. கிட்டத்தட்ட லம்போர்கினி சொகுசு கார்கள் போல.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பார்த்து நோயாளி நன்றாக இருக்கிறாரா என அறியும் நாள்களும் போய்விட்டன. தற்போது மருத்துவச் சிகிச்சைகள் விரைவான முறையில் உள்ளன.

இந்த மருந்துகள் நீரிழிவு மட்டுமின்றி மற்ற உடல் உறுப்புகளுக்காவும் வேலை செய்கின்றன. மேலும் அவைகள் இதயத்தை பாதுகாக்கின்றன. மாரடைப்பை தடுக்கின்றன.

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதும் பெருமளவு குறைகிறது. இதனால் இவைகள் அதிசய மருந்துகளா? இவை அனைவருக்கும் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியெழுகிறது.

இந்த மருந்துகள் நோயாளியின் உடல் விவரங்கள் மற்றும் பொருளாதார அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நீரிழிவு முதல் வகை மற்றும் கர்ப்பிணி நீரிழிவு நோயாளிகளுக்கு இதனை வழங்க முடியாது.

இதில் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது. இந்தப் புதிய வகை மருந்துகளை நோயாளிகள் மறுக்கக் கூடாது. மேலும் இந்த மருந்துகளின் தீமைகள் குறித்து நோயாளிகள் தங்களின் மருத்துவரிடம் விவாதிப்பது நல்லது.

நிறைவாக நோயாளிகள் உணவு மற்றும் உடற்பயிற்சியை சரியாக எடுக்காவிட்டாலும் இந்த மருந்து தோல்வியடையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment