உங்கள் முகம் பொலிவு பெற பல விதமான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தியிருப்பீர்கள். சிலருக்கு அவர்களது முகத்திற்கு இந்த பொருட்கள் ஒற்றுபோகும் பலருக்கு ஒற்றுப்போகாது. அப்படி வெவ்வேறு வகை தோல். ஆதாவது ஆயிலி ஸ்கின், டிரை ஸ்கின் இப்படி வெவ்வேறு தோல் வகை உடையவர்களுக்கு ஏற்றவாறு ஒரே பொருள் இருக்கிறது. இந்த பொடியை நீங்களே வீட்டிலே செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இரண்டு வகை சருமம் உடையவர்களும் இந்த பொடியை பயன்படுத்தலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்
ஓட்ஸ் பொடி, சந்தனப் பொடி, ஆரஞ்சு தோல் பொடி. இதில் ஓட்ஸ் பொடியை வீட்டிலேயே நாம் ஓட்ஸ் வாங்கி செய்யலாம். சந்தனம், ஆரஞ்சு தோல் பொடி இயற்கை அங்காடியில் கிடைக்கும்.
எப்படி பயன்படுத்துவது
இந்த மூன்று பொடியை ஒரே அளவில் எடுத்து ஒன்றாக கலந்து வைத்துகொள்ளவும். தற்போது உங்களுக்கு முகம் கழுவ எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துகொள்ள வேண்டும், டிரை ஸ்கின் உள்ளவர்கள். இந்த பொடியை பால் அல்லது தயில் கலந்து முகத்தில் போட வேண்டும்.
இதுவே உங்களுக்கு ஆயில் ஸ்கின் இருந்தால் ரோஸ் வாட்டர் அல்லது அரிசி வடித்த தண்ணீர் கலந்து முகத்தில் போட வேண்டும். கழுத்து பகுதியிலும் பயன்படுத்தலாம். குழந்தைகள் கூட இந்த பயன்படுத்த முடியும்.