பொரி கடலை உருண்டை, ஒரு கர்நாடக ஸ்டைல் ரெசிபி. இதை விரும்பாதோர் இருக்கமாட்டார். இந்த ரெசிபியை வீட்டில் எளிதாக செய்யலாம். அத்தோடு இதில் கலோரிகள் குறைவு.எனவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது உதவும்.
இனி இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொரிகடலை - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
நிலக்கடலை - 1/2 கப்
உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்
உலர்ந்த பழங்கள் (முந்திரி +உலர்ந்த திராட்சை பழங்கள்) - 8-10 (உடைத்தது)
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் - 4
நெய் - 1/2 கப் தண்ணீர் - 1/4 கப்
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி, பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். 2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும். பின் அதே கடாயில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து எடுத்து வைத்துக்கொண்டு, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து , வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்த வேண்டும்.
பின் இதனுடன் அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு, வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். நன்றாக கிளறியதும் அவற்றை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விட்டு பந்து அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி எடுத்துக்கொள்ளலாம். இப்பொழுது பொரிகடலை உருண்டை ரெடி.