வீட்டில் விசேஷம், மற்றும் முக்கிய நிகழ்வு என்றால் மாதவிடாய் வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொள்வேம். மாதவிடாய் முக்கியமான விஷயமாக இருந்தாலும், அதன் வலி மற்றும் மார்பக வீக்கம் மற்று வயிறு உப்புதல் இப்படி பல விஷயங்களை நாம் விசேஷ நாட்களில் கையாள முடியாது. மாதவிடாயை தள்ளிப்போட மருந்துகள் இருந்தாலும், அதை பயன்படுத்துவதால் வரும் விளைவுகளை நினைத்து நாம் கவலை கொள்வோம். இதனால் இயற்கை முறையில் மாதவிடாயை தள்ளிப்பொட சில வழிகளை நாம் மேற்கொள்ள முடியும். ஆனால் இதற்கு எந்த மருத்துவ ரீதியான நிரூபனமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆபிள் சிடர் வினிகர்
மாதவிடாய் தேதி நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன் ஆபிள் சிடர் வினிகரை தண்ணீருடன் கலந்து குடிக்க வேண்டும். பிஎம்ஸ் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக இது இருக்கிறது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறை பருகினால் மாதவிடாய் தள்ளிப்போகும் என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் இதை நிரூபிக்க எந்த வித மருத்துவ ஆய்வுகளும் இல்லை. ஒருவேளை நீங்கள் இதை பயன்படுத்த நினைத்தால், குளிர்பானத்தோடு அல்லது டீயுடன் எலுமிச்சை சாறை கலந்து சக்கரை இல்லாமல் பருகலாம்.
ஜிலட்டின் தண்ணீர்
ஜிலட்டின் கலந்த தண்ணீரை மாதவிடாய் வரும் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பாக குடிக்கலாம். இதனால் மாதவிடாய் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
துவரம் படுப்பு பொடி
துவரம் பருப்பை நன்றாக பொடி செய்துகொள்ளுங்கள். இதை சூப்பில் சேர்த்து, மாதவிடாய் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு பருகுங்கள், அதிக அளவில் இதை பருக வேண்டாம். உடல் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனே இந்த சூப் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.
தர்பூசணி
மாதவிடாய் வருவதற்கு 7 நாட்களுக்கு முன்பு தர்பூசணியை சாப்பிடலாம். மேலும் காரம் அதிகமான பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது ஒரு வகையில் மாதவிடாய் சீக்கரம் ஏற்பட காரணமாக அமையலாம்.