Advertisment

அரைச்சுவிட்ட சாம்பார்… இப்படி செஞ்சா தெருவே மணக்கும்னா பாத்துக்கங்க!

coconut sambar recipe in tamil: சாம்பாரில் தேங்காய் அரைத்து ஊற்றுவதால் வீடே கமகமக்கும். அதோடு சைவ ஹோட்டல்களில் தயார் செய்வது போல் சுவையும் மணமும் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sambar recipe in tamil: arachuvitta sambar making in tamil

sambar recipe in tamil: சாம்பார் என்றாலே தனி சுவை தான். இவற்றில் பல வகைகள் உள்ளன என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. அதில் முருங்கை சாம்பார் அல்டிமேட்டாக இருக்கும். சாம்பாரின் சுவையை கூட்டுவதற்காக சிலர் தேங்காய் அரைத்து ஊற்றுவார்கள்.

Advertisment

இப்படி சாம்பாரில் தேங்காய் அரைத்து ஊற்றுவதால் வீடே கமகமக்கும். அதோடு சைவ ஹோட்டல்களில் தயார் செய்வது போல் சுவையும் மணமும் இருக்கும்.

அரைச்சுவிட்ட சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் -

கடுகு - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

கருவேப்பிலை

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

கத்தரிக்காய் - 3

முருகை காய் - 1

அவரை காய் - 2

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்

துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)

சாம்பார் செய்முறை

முதலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு விட்டு பொரிய விடவும். பிறகு சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் உப்பு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இப்போது கத்தரிக்காய், முருகை காய், அவரை காய் சேர்த்து வதக்கவும். இவற்றுக்கு பதிலாக சாம்பார் காய்கறிகளை இங்கு சேர்த்துக்கொள்ளலாம்.

இவை நன்கு வதங்கிய பின்னர் மஞ்சள் சேர்த்து கிளறி, காய்கறி வேக தேவையான தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடியால் மூடி நன்கு வேக விடவும்.

காய்கறி வெந்து வந்த பின்னர் அவற்றோடு முன்பு வேகவைத்துள்ள பருப்பு சேர்க்கவும். பருப்பு சேர்த்த 2 நிமிடத்திற்கு கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும். பிறகு சாம்பார் பொடி சேர்க்கவும்.



சாம்பார் பொடி அரைக்க

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

மல்லி - 2 டீ ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

வெந்தயம் - 1/4

காய்ந்த மிளகாய் - 5

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

publive-image

சாம்பார் பொடி அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வாணெலியில் இட்டு வறுத்து, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவை பயன்படுத்தி விட்டு மீதம் உள்ளவற்றை ஒரு டப்பாவில் அடைத்து பிற நாட்களில் பயன்படுத்தலாம்.

இந்த பொடியை சேர்த்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி கீழே இறக்கவும். இந்த சுவையான சாம்பாரை இட்லி, தோசை, பொங்கல், சாதம் என எல்லாவற்றோடும் சேர்த்து சுவைத்து மகிழலாம்.

புதினாவில் உள்ள வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும்.

publive-image

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Food Recipes Healthy Life Food Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Food Receipe Tamil Food Recipe Tamil Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment