ஓற்றைத் தலைவலியானது குழந்தை பருவத்திலோ, இளம் பருவத்திலோ அல்லது முதுமை பருவத்திலோ கூட ஆரம்பிக்கலாம்.
ஒற்றை தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்:
மிதமான வலியிலிருந்து கடுமையான ஓரு பக்க அல்லது இரு பக்க வலியாக இருக்கலாம்.
வலியானது ஏறி இறங்கும் அல்லது கடு கடுப்பாகவும் இருக்கும்.
உடல் ரீதியான வலியாகவும் இருக்க கூடும்.
அன்றாட செயல்களில் வலி ஏற்படலாம்.
குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல்.
ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறனில் கூச்சம் ஏற்படலாம்.
ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்
தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் கடு கடுப்பு இருக்கும்.
வெளிச்சம், ஒலி மற்றும் வாசனைகளில் வெறுப்பு உண்டாகும்.
மிகவும் சோர்வாக (fatigue) உணரப்படும்.
குமட்டல் மற்றும் வாந்தி.
எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள்.
வேலையில் கவனம் செலுத்த இயலாமை.
மோசமான இயக்க நிலை.
கடும் ஓற்றைத் தலைவலியின் அறிகுறிகள்
ஒளிரும் விளக்குகள் அல்லது மங்கலான இடங்களை பார்வையிடும்போது ஏற்படலாம்.
உணர்வின்மை அல்லது விருவிருப்பு இருக்கும்.
பேசும்பொழுது குழப்பம் மற்றும் சிரமம் ஏற்படும்.
ஒரு விநோதமான வாசனை அல்லது காதுகளில் ஏதேனும் சப்தம் ஓலித்தல்.
குமட்டல் மற்றும் பசியின்மை.
தீவிர நிலையில் முழுமையாக அல்லது பகுதியளவு பார்வை இழப்பு ஏற்படலாம்.
நாள்பட்ட ஒற்றை தலைவலிக்கான அறிகுறிகள்
நாள் முழுவதும் தாங்க முடியாத தலைவலியாக நீடிக்கும்.
தொடர்ச்சியான குமட்டல் மற்றும் வாந்தி.
பார்வை இழப்பு மற்றும் பசியின்மை.
ஃப்மிலியல் ஃஎமிப்லெகிக் தலைவலிக்கான அறிகுறிகள்
உடலின் ஒரு புறத்தில் பக்கவாதம் ஏற்படல்.
திடீரென தலைச்சுற்றல் (வெர்டிகோ).
ஊசி அல்லது கத்தி குத்துவதுப்போல உணர்தல்.
மங்கலான பார்வை மற்றும் தெளிவற்ற பேச்சு.
பக்கவாதம் (வலி, வாந்தி, அறியாமை) போன்ற அறிகுறிகள்.
பசலிர் அரிடரி தலைவலியின் அறிகுறிகள்
தலையில் ஒரு பக்கத்தில் அல்லது இரண்டிலும் திடீரென வலி மற்றும் கடு கடுப்பு ஏற்படும்.
முழுமையாக அல்லது பாதியான பார்வை இழப்பு.
குமட்டல் மற்றும் வாந்தி.
தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் நிலைத்தடுமற்றம்.
பேச்சில் சிரமம்.
தசைகளில் குறைபாடு.
ஒற்றைத் தலைவலி சிகிச்சை
தலைவலி வராமல் தவிர்க்க சில நடைமுறைகளை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும். நீங்கள் எப்போதாவது ஒற்றைத் தலைவலியைப் அனுபவித்தால், அதன் அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தற்காத்து கொள்ளவது மிக முக்கியமானதாகும். அதனால் தான் ஒற்றைத் தலைவலியை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:
தடுப்பு (தொடங்குவதற்கு முன்பாக தலையிடுவது)
கடுமையான / தோல்வியடைந்த நிலை (விரைவாக தலைவலியை நிறுத்த வேண்டும்).
தடுப்பு சிகிச்சைகள்
வாழ்க்கை முறை மாற்றங்கள்
மருந்துகள்
மருந்து அல்லாத தீர்வுகள் (உடல் சிகிச்சை, மசாஜ், குத்தூசி மருத்துவம் அல்லது ஒரு சிஓராப்டோகிராஃபர் போன்றவை).
ஊட்டச்சத்துக்கள் (மெக்னீசியம், கோக் 10, அல்லது வைட்டமின் B2 அல்லது பி 12)
கடுமையான மற்றும் தோல்வியடைந்த நிலை சிகிச்சை
சில அடிப்படை வலி நிவாரணிகள் மூலம் சரி செய்யலாம் (ஆஸ்பிரின், இபுப்ரோஃபென், நபிரக்சன் மற்றும் அசெட்டமினோஃபென் போன்றவை) மற்றும் கலப்பு மருந்துகள் (எக்ஸ்டிரினிக் மைக்ரேன், உதாரணமாக, அசெட்டமினோஃபென், ஆஸ்பிரின் மற்றும் காஃபின் கலவையாகும், மற்றும் அல்கா செல்டெர் ஆஸ்பிரின்).
ஆனால் சித்த மருத்துவம் மட்டுமே முழுமையான குணம் அளிக்கும்.
ஒற்றைத் தலைவலி உள்ள நீங்கள் எத்தனையோ மருந்துகள் பயன்படுத்தி இருக்கலாம்.
உங்களுக்கு தெரியுமா? சித்த மருத்துவத்தில் ஒரே ஒரு தைலம் இந்த ஒற்றைத் தலைவலியை ஆயுள் காலம் முழுவதும் வராமல் அழிக்கும் குணம் கொண்டது. எனவே சித்த மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டு உங்கள் சிகிச்சையை தொடங்குங்கள்.
தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480 .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.