பெரும்பாலான மக்கள் தங்கள் சருமம் பளபளப்பாக இருக்க, விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்களை நாடுகிறார்கள்.
ஆனால் ஆரோக்கியமான உணவுடன் இணைந்த வைத்தியம்’ ஒருவரின் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வீட்டு வைத்தியம் முடிவுகளைக் காட்டத் தங்களுடைய சொந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் அதே வேளையில், அவை ஆர்கனிக், பயனுள்ள, இரசாயனங்கள் இல்லாதவை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, சருமத்திற்கு ஏற்றவை.
ஒருவரின் சருமத்தை இறுக்கி மிருதுவாக்க, நடிகை ஜூஹி பர்மர் தனது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வீட்டு வைத்தியத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதை எப்படி செய்வது என்பது இங்கே.
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் - மசூர் பருப்பு சாறு
2 தேக்கரண்டி - இனிப்பு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
2 தேக்கரண்டி – கிளிசரின்
2 தேக்கரண்டி – கற்றாழை ஜெல்
செய்முறை
*பருப்பைக் கழுவவும். ரோஸ் வாட்டரில் 5-6 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறிய பிறகு, அரைத்து பேஸ்ட் செய்யவும். பிறகு வடிகட்டவும்.
*ஒரு கிண்ணத்தில், சிவப்பு பருப்பு சாறு எடுத்து, இனிப்பு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிளிசரின், கற்றாழை ஜெல் மற்றும் உங்கள் விருப்பப்படி அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கவும். இப்போது நன்றாக கலக்கவும். இதை ஒரு சுத்தமான ஜாடிக்கு மாற்றவும்.
கிரீம்’ அறை வெப்பநிலையில் 10-15 நாட்களுக்கு சேமிக்கலாம்.
அதை எவ்வாறு பயன்படுத்துவது?
சில துளிகள் எடுத்து உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். காலை, மாலை என இருவேளை பயன்படுத்தலாம்.
யார் அதைப் பயன்படுத்தலாம்?
இருப்பினும், உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் கிரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட கிரீம் சாதாரண மற்றும் வறண்ட சருமத்திற்கு நல்லது. "சில வாரங்களில் முடிவுகளை நீங்கள் தெளிவாகக் காண்பீர்கள்".
நீங்களும் முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?.