உங்களில் எத்தனை பேர் யோகா செய்கிறீர்கள் என்று தெரியாது. 'அட! அதுக்கு தனியா காசு கொடுத்து போய் பண்ற அளவுக்கெல்லாம் ஒண்ணும் இல்லப்பா!' என்கிறீர்களா?
நீங்க வீட்டுலயே, இதுக்குன்னு நேரம் கூட ஒதுக்காமல், உங்களின் அன்றாட முக்கிய பணியான ஒன்றின் போது செய்து கொள்ளலாம்.
அப்படி என்ன பணி?? வேறென்ன சாப்பிடுவது தான்.
நீங்கள் தினம் சாப்பிடும் போது சுகாசனா முறையில் சாப்பிட வேண்டும் என்று தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர்.
data-instgrm-version="12">View this post on InstagramA post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar) on
A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar) on
A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar) on
ஏன் சுகாசனா முறையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?
முதுகெலும்பு சீரமைக்கப்பட்டு ஒருவரின் தோரணையை மேம்படுத்த உதவுகிறது.
ஒருவர் சாப்பிடும்போது இது கவனத்தையும் மேம்படுத்துகிறது, அதோடு, அதிகப்படியான உணவைத் தடுக்கிறது.
இது வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் டி போன்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பதை மேம்படுத்துகிறது.
இது உடலை உற்சாகமாக வைத்திருக்கிறது மற்றும் உடல் வலிமையையும் நிலைத்தன்மையையும் உருவாக்க உதவுகிறது.
பத்மாசனம் போன்ற நீண்ட கால தியான போஸ்கள் செய்தபின் உடலை நிதானப்படுத்த சுகாசனா உதவுகிறது.
இது 'ஈஸி போஸ்' என்று அழைக்கப்பட்டாலும், நீண்ட நேரம் நீங்கள் அதே நிலையில் அமர்ந்திருப்பது கடினமாகிவிடும். ஏனெனில், முழு உடலின் ஒட்டுமொத்த எடையையும் பின்பக்கம் தாங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.