பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி.
நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.
சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.
இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘என்ன மச்சான்’ பாடலை இத்தம்பதி பாடினர். பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
தமிழகம் தாண்டி சிங்கப்பூர், மலேசியா, லண்டன், துபாய் போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் இவர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், செந்தில் கணேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட e-bike. எலக்ட்ரிக் கரண்டில் ஓடக்கூடிய பைக் இதனை கண்டுபிடித்தவர்கள் காரைக்குடியை சேர்ந்த ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
இது மாதிரி இன்னும் நிறைய கண்டுபிடிக்க வேண்டும் என்று எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டு, மனைவி ராஜலக்ஷ்மியுடன் அந்த எலக்ட்ரிக் பைக்கை ஓட்டக் கூடிய வீடியோவை வெளியிட்டு, எனது நீண்ட கால ஆசை நிறைவேறியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.