Advertisment

காலையில் சீரகம், கொத்தமல்லி, நல்லெண்ணெய்... சிம்பிளான ஆயுர்வேத டிப்ஸ்!

Tamil Lifestyle Update : ஆயுர்வேதத்தின் படி, ஒருவர் சில பழக்கங்களை தினசரி பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலையில் சீரகம், கொத்தமல்லி, நல்லெண்ணெய்... சிம்பிளான ஆயுர்வேத டிப்ஸ்!

Tamil Health Update : உலகில் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி இருந்தாலும், மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கையை நாடிச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறோம். தற்போது புதிது புதிதாக நோய்களையும், அதற்கு புதிய மருந்துகளையும் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் கண்டுபிடிக்கும் அனைத்து மருந்துகளும் மனிதனின் நோயை முழுமையாக குணப்படுத்துகிறதா? அல்லது நோய் வராமல் தடுக்கிறதா என்று பார்த்தால் பாதிக்கு மேல் இல்லை என்றுதான் பதில் வரும்.

Advertisment

அந்த அளவிற்கு மனிதனில் தொற்று நோய் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  பொருத்தமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்றால், வாழ்க்கையில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், புதிய பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு அதனை நமது அண்றாட வாழ்வில் செயல்படுத்துவது அவசியமாகும். ஆயுர்வேதத்தின் படி, ஒருவர் சில பழக்கங்களை தினசரி பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

இது குறித்து ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி, “ஆயுர்வேதம் ஒரு வாழ்க்கை முறை, நமது பழக்கவழக்கங்களின் தினசரி முயற்சி. இந்த பழங்கால ஞானத்தின் வழிகாட்டுதலுடன், நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வாழ்க்கையில் நமது முழு திறனை எட்டுவதற்கு நாம் தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.  மேலும் ஆயுர்வேதம் உங்கள் உடல், மனம் மற்றும் ஆவிக்கு இடையில் சமநிலையைக் கண்டறிய ஊக்குவிக்கிறது, ஏனெனில் இந்த மூன்று கோளங்களும் இணைக்கப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக ஒருவர் பின்பற்றக்கூடிய சில முக்கியமான ஆயுர்வேத பழக்கங்களைப் அவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எழுந்திருத்தல்

சூரிய உதயத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே சீக்கிரம் எழுந்திருங்கள்.

நாசி சொட்டுகள் (நாஸ்யா)

தலையில் இரண்டு சொட்டு எள் எண்ணெய்/கடுகு எண்ணெய்/நெய் போடவும். இது முன்கூட்டிய முடி நரைப்பதைத் தடுக்கிறது. வழுக்கையை தடுத்து நிறுத்தும் மற்றும் நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது.

உடற்பயிற்சி (வயமா)

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேக்கத்தை நீக்கி, புத்துணர்ச்சி பெற உதவும்.

பல் பராமரிப்பு

வேப்பம் (ஆசாதிராட்சா இண்டிகா), கதிர் (அகாசியா கேட்சு) போன்றவற்றைப் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யலாம். இது வாய் துர்நாற்றம் மறைந்துவிடும்.

குளியல் (ஸ்னானா)

உடற்பயிற்சிக்கு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.

மசாலா செய்யவும்

சீரகம், கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மஞ்சளுடன் சேர்த்து மசாலா செய்யவும். இந்த மசாலா செரிமானத்திற்கு உதவுகிறது, இதயத்தைப் பாதுகாக்கிறது மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது.

லேசான இரவு உணவு சாப்பிடுங்கள்

ஆயுர்வேதம் இரவு 8 மணிக்கு முன் லேசான இரவு உணவை சாப்பிட பரிந்துரைக்கிறது. இது வளர்சிதை மாற்ற கூறுகளை இரவில் சிறிது ஓய்வெடுக்க உதவுகிறது.

தூக்கம் (நித்ரா)

சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் இனிமையாகவும் வைத்திருங்கள். பகலில் தூங்குவதைத் தவிர்க்கவும். சரியான தூக்கம் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment