Advertisment

பெருஞ் சீரகம், உலர் திராட்சை, லெமன்... கோடையில் இதை மிஸ் பண்ணாதீங்க..!

Tamil Lifestyle Update : நீங்கள் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீங்கள் பலவகை குளிர்ச்சியான  பொருட்களை முயற்சித்திருக்கலாம்

author-image
WebDesk
New Update
பெருஞ் சீரகம், உலர் திராட்சை, லெமன்... கோடையில் இதை மிஸ் பண்ணாதீங்க..!

Tamil Lifestyle Update : இந்தியாவில் பருவநிலை மாறும்போது நோய் தொற்றும் அதிகமாக இருக்கும். இந்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வதை வழக்கமாக கடைபிடிக்க வேண்டியது அவசியம்.  கோடை காலத்தில் உடல் அதிக வெப்பநிலையை ஏற்கும். இவ்வாறு உடல் வெப்பம் அதிகரிக்கும்போது உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும். அப்போது நாம் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உட்கொண்டு வரும்போது இந்த இன்னல்களை தவிர்க்கலாம்.

Advertisment

அந்த வகையில் நீங்கள் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீங்கள் பலவகை குளிர்ச்சியான  பொருட்களை முயற்சித்திருக்கலாம். ஆனால் ஹைட்ரேட்டுகள் மட்டுமல்லாமல் உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கும் மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கும் ஒரு பானம் உள்ளது என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  

இது தொடர்பாக பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கணேரிவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடனடி கோடை குளிர்ச்சி என்று வேரியாலி ஷர்பத்தை  குடிக்க பரிந்துரைத்தார்.

அனைத்து இந்திய வீடுகளிலும், தினசரி சமையலறை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சிறப்பு கோடை பானம் சிறந்த நள்மைகளை கொடுக்கும்.," ஊட்டச்சத்து நிபுணர், ராஷ்மி ராக்கெட் திரைப்படத்திற்காக டாப்ஸி பண்ணுவின் உணவை இவர் திட்டமிட்டதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

வெரியாலி ஷர்பத் பெருஞ்சீரகம் விதைகள் அல்லது சான்ஃப் கொண்டு தயாரிக்கப்படுகிறது, இதில் கேம்ப்ஃபெரோல் என்று அழைக்கப்படும் ஃபிளாவனாய்டு உள்ளது. இந்த கலவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது; இதுதான் கிரீன் டீக்கு 'டிடாக்ஸ்' மற்றும் 'எடை குறைப்பு' பண்புகளை கொடுக்கிறது.

வேரியாலி ஷர்பத் தயாரிப்பது மிகவும் எளிது, ஆனால் நீங்கள் முன்கூட்டியே சில தயாரிப்புகளைச் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்

பெருஞ்சீரகம் விதைகள் - கப் -  (தூள்)

உலர் கருப்பு திராட்சை - 1 டீஸ்பூன்

வெள்ளை கல் சர்க்கரை - 2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு (விரும்பினால்) - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

செய்முறை

பெருஞ்சீரக விதைகளை நன்றாக பொடியாக அரைக்கவும். பொடியை தண்ணீரில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். உலர்ந்த கருப்பு திராட்சையை தண்ணீரில் தனித்தனியாக இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். சர்க்கரையை ஒரு நன்றாக அரைக்கவும்.

பொடி சரியாக ஊறியவுடன், ஒரு வடிகட்டியின் உதவியுடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வடிகட்டவும். திராட்சையை மிக்ஸியில் அரைத்து அதே பாத்திரத்தில் வடிகட்டவும். இரண்டையும் நன்கு கலக்கவும். கிண்ணத்தில் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

நீங்கள் ஒரு துளி எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம். உங்கள் பெருஞ்சீரகம் விதை ஷெர்பெட் தயாராக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment