Advertisment

அரிசி உணவை பாதியா குறைங்க; அதுக்குப் பதிலா சிக்கன், மீன்... அடடே, சுகர் பேஷன்ட்களுக்கு நல்ல செய்தி!

வாரத்திற்கு 3 முறைக்கு குறைவாக உடல் ரீதியாக செயலற்றவராக இருந்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் இருக்கா? இந்த 4 விதைகளில் தினமும் ஏதாவது ஓன்றை சாப்பிடுங்க!

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று நீழிரிவு நோய். உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. தற்போது வரை இந்தியாவில் இந்தியாவில் தற்போது 74 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Advertisment

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இந்நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் உணவை ஆற்றலாகப் பயன்படுத்துவதை தடுக்கிறது. இந்த வளர்சிதை மாற்றக் கோளாறு உயர் இரத்த சர்க்கரையை ஏற்படுத்துகிறது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது நரம்புகள், கண்கள், சிறுநீரகம் மற்றும் உடலின் பிற முக்கிய உறுப்புகளை பாதிக்கும். எனவே இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து நீரிழிவு அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

publive-image

சர்க்கரை நோய் நிவாரணம் பற்றி ஆய்வு என்ன சொல்கிறது?

புதிதாக கண்டறியப்பட்ட நீரிழிவு நோய்க்கு, கார்ப் நுகர்வு 55% ஆகவும், புரதம் மற்றும் கொழுப்பை முறையே 20% மற்றும் 25% ஆக அதிகரிக்கவும் ஆய்வு பரிந்துரைக்கிறது. பொதுவாக கார்போஹைட்ரேட் நமது உணவில் 70% க்கும் அதிகமாக உள்ளது, எனவே ஆய்வின் அடிப்படையில் அதிக தாவர மற்றும் விலங்கு புரதங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், நீரிழிவு நோய்க்கு 56% கார்போஹைட்ரேட், 20% புரதம் மற்றும் 27% கொழுப்பு பரிந்துரைக்கப்படுகிறது. இது தொடர்பான மொத்தம் 18,090 பெரியவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கோதுமை

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வெள்ளை சாதத்தை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போன்று, கோதுமையும் நீழிரிழிவு நோய்க்கு சமமான எதிராளி என்பதை ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் வி மோகன் தெரிவித்துள்ளார்.

நீங்கள் மதிய உணவிற்கு 2 கப் சாதம் அல்லது 4 ரொட்டிகளை சாப்பிடுகிறீர்கள் என்றால் அதில் ஒரு ரொட்டி அல்லது 1-1/2 கப் அரிசியை நல்ல புரததமாக இருக்கும். சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதையும் நிபுணர் பரிந்துரைக்கிறார். ஆனால் தாவர புரதம், மீன் மற்றும் கோழி கூட நல்லது, என்று கூறியுள்ளார்.

publive-image

இந்தியாவில் சர்க்கரை நோய் சுமை

இந்தியாவில், தற்போது 74 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், மேலும் 80 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தையவர்கள். இந்தியாவில் கடந்த 2009 ம் ஆண்டு 7.1% ஆக இருந்த நீரிழிவு நோயின் பாதிப்பு 2019 ம் ஆண்டில் 8.9% ஆக உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2045 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 135 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியாவில் டைப் 2 நீரிழிவு நோயின் எபிடெமியாலஜி" என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டாக்டர் வி மோகன் ஒரு ஆசிரியரும் ஆவார், இந்த ஆய்வில் தோராயமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 57% நபர்கள் கண்டறியப்படாமல் உள்ளனர். உலக அளவில் நீரிழிவு நோயில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த நீரிழிவு நோயாளிகளில், 12.1 மில்லியன் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இது 2045 ஆம் ஆண்டில் 27.5 மில்லியனாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், நீரிழிவு நோய்க்கு 1.6 மில்லியன் மக்கள் பலி

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் உலகைத் தாக்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, நீரிழிவு நோய் 1.6 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர். ஸ்கிமிக் இதய நோய், அதைத் தொடர்ந்து பக்கவாதம், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட நோய்களாலும் உயிரிழந்துள்ளனர்.

publive-image

நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணிகள்

உடல் பருமன், உடல் உழைப்பின்மை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, நடத்தை பழக்கம், மரபியல், குறைவான தூக்கம், மன அழுத்தம், மாசுபாடுகளுக்கு வெளிப்பாடு, கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற இரத்த கொழுப்பு, ஆகியவை நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்களாகும்.

யுஎஸ் சிடிசி படி, நீங்கள் வாரத்திற்கு 3 முறைக்கு குறைவாக உடல் ரீதியாக செயலற்றவராக இருந்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. "உங்களுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால், நீங்கள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாகலாம்" என்று ஆய்வு கூறுகிறது. வாழ்க்கை முறை பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதைத் இதனை தடுக்கலாம்

நீரிழிவு நோயுடன் தொடர்புடைய அபாயங்கள்

நீரிழிவு நோய் ஒரு முற்போக்கான கோளாறு; அது அதிகமாகும் போது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நிர்வகிக்கப்படாத நீரிழிவு ஒரு நபரை வாஸ்குலர் நோய்களுக்கு ஆளாக்குகிறது. "வகை 2 நீரிழிவு நோயின் பெரும்பகுதி மேக்ரோவாஸ்குலர் (இருதய (சி.வி), செரிப்ரோவாஸ்குலர் புற தமனி நோய்) மைக்ரோவாஸ்குலர் (நீரிழிவு ரெட்டினோபதி, நெஃப்ரோபதி மற்றும் நரம்பியல்) சிக்கல்களால் ஏற்படுகிறது என்று 2021 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஆய்வு கூறுகிறது.

publive-image

நீரிழிவு நோயில் யார் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

இந்த நோய் உங்கள் குடும்பத்தில் இருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் குறைவான உடல் உழைப்பு, அதிக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகம் இருக்கிறது என்றால், நீங்கள் நீரிழிவு நோயில் இருந்து கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர, உங்களுக்கு கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகள் இருந்தால், இந்த நோயுடன் தொடர்புடைய ஆபத்தை அதிகரிப்பதால், நீரிழிவு நோயைப் பற்றி நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment