/indian-express-tamil/media/media_files/LgLzO3osW2Y63smhJ2hs.jpg)
ஆண்களை விட பெண்களின் உடல் அமைப்பு பெரிய மாற்றம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. உடைகள் அணிவதும், வித்தியாசமாக இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் உள்ளாடைகளை அணியும்போது பல்வேறு பிரச்னைகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். இதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மருத்துவர்கள் பலரும் பல்வேறு டிப்ஸ்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார். பெண்களை பொதுவாக தாக்கும் தீவிரமான நோய்களின் ஒன்றாக இருக்கும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க, பிரஸ்ட் மசாஜ் செய்யதால் போதும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து ஒரு வீடியோவில் பேசிய அவர், தினமும் நமது உடல் உறுப்பை கேர் செய்து பார்த்துக்கொள்வது போல் பிரஸ்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் குளிப்பதற்கு இரண்டு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, வீட்டில் தேங்காய் எண்ணெய் இருக்கிறதா? இருந்தால், உங்கள் மார்பகங்களை மேல்நோக்கித் தூக்கி, ஒரு ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். மார்பகங்களை கீழ்நோக்கி மசாஜ் செய்யக் கூடாது. மார்பகங்களை வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இதுதான் நம் இதயத்துக்கான மசாஜ் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
இதயத்தை நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு மார்பகங்களிலும் மூன்று நிமிடங்கள் செலவழித்தால், மார்பகப் புற்றுநோயிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். குப்புறப் படுக்கக் கூடாது. இரவில் தாமதமாகச் சாப்பிடாதீர்கள். ஒருவேளை தாமதமாகச் சாப்பிட்டாலும், காய்கறிகள் அல்லது நீர் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரவு உணவை ஏழு மணிக்கெல்லாம் முடித்துவிடுங்கள்.
நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடவே கூடாது. குடிக்கும் பானங்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான சூட்டில் குடியுங்கள். இதைச் செய்தாலே பாதி பிரச்சனைகள் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us