மனித உடல் இரத்தம், நீர் ஒரு டஜன் அணுக்கள் மற்றும் உயிர் அணுக்களால் ஆனது என்று நாம் சிறு வயதிலிருந்தே, கற்றுக்கொண்டு வருகிறோம். இரத்தம், உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன்களை எடுத்துச் சென்று வளர்சிதை மாற்றக் கழிவுகளை உயிரணுக்களிலிருந்து கொண்டு செல்லும் ஒரு முக்கியமான உடல் திரவமாகும். ஆனால் மனித உடலின் இரத்தம் திரவங்கள் மற்றும் திடப்பொருட்களால் ஆனது என்ற தகவல் ஆச்சரியமாகத்தான் இருக்கும். இதில் இரத்தத்தின் திரவக் கூறு பிளாஸ்மா என்று அழைக்கப்படுகிறது,
மனித உடலில் இரத்தத்தில் பாதிக்கும் மேல் பிளாஸ்மா உள்ளது. இதில் இரத்தத்தின் திடமான பகுதி சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை உள்ளடக்கியது. ஒரு சராசரி வயது உடையவரின் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இதில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இரத்தம் குறைவாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நாம் அவ்வப்போது இரத்தத்தை இழக்கிறோம்;
ஆனாலும் நம் உடலுக்கு இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட உணவு வகைக்களின் மூலம் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். அப்படி இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யும் உணவுகளை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? பல நபர்கள் போதுமான இரத்தத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் மோசமான இரத்த ஓட்டத்தால் அவதிப்படுகிறார்கள்,
இது பெரும்பாலும் பலவீனம், உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஆகியவற்றால் வெளிப்படுகிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்படாவிட்டால் நரம்பு பாதிப்பு, திசு சேதம் அல்லது பக்கவாதம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சில உணவுகளை இங்கே காணலாம்:
பீட்ரூட்
இந்த ஆழமான சிவப்பு காய்கறி ஆக்ஸிஜனேற்றிகளின் முக்கிய அங்கம். அதன் அழகான சிகப்பு நிறத்திற்கு காரணமான நிறமிகள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். பச்சையாக சாப்பிடும்போது, பீட்ரூட் சுழற்சியை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், கல்லீரலை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. "இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் கலவை இரத்தத்தில் ஆக்ஸிஜனை அதிகரிப்பதை ஊக்குவிப்பதற்கும், இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் பயன்படுகிறது.
பெர்ரி:
அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி, மல்பெர்ரி, ராஸ்பெர்ரி- சீசன் இனிப்பு மற்றும் புளிப்பு பெர்ரிகளால் நிரம்பியுள்ளது. இந்த பெர்ரி இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கும்
மாதுளை:
ஜூஸ், இனிப்பு பழம் பாலிபீனால் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நைட்ரேட்டுகளின் மிகவும் சக்திவாய்ந்த ஆதாரமாக இருப்பது மாதுளை. அவை நம்பமுடியாத வாசோடைலேட்டர்களாக கருதப்படுகின்றன. மென்மையான இரத்த ஓட்டத்திற்கு இரத்த நாளங்களை சீராக இயங்கவும் உதவுகிறது. நீங்கள் மாதுளை விதைகளை சாலட்களில் டாஸ் செய்யலாம் அல்லது அவற்றை ஜூஸ் செய்து அருந்தலாம்.
பூண்டு
பூண்டு என்ற இயற்கை மருந்து இல்லாமல் இல்லாமல் ஒரு உணவை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாவிட்டால், உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. "பூண்டு மனித உடலில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது: உடலில் சுற்றோட்ட மற்றும் செரிமான அமைப்புகளுக்கு உதவுதல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடுவது பூண்டின் தலைசிறந்த பண்புகளாகும்.
இலவங்கப்பட்டை
பல விலங்கு ஆய்வுகளில் இலவங்கப்பட்டை அதன் செயல்திறனை வெப்பமயமாக்கும் மசாலாவாகக் காட்டியுள்ளது, ஆனால் இந்த இலவங்கப்பட்டை இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
அனைத்து நன்மைகளுக்கும் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் மருந்துகளில் இருக்கும் நிலை ஏற்பட்டால்,, உங்கள் மருந்தினை தவிர்க்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.