Advertisment

பாம்புக்கடிக்கு முதலுதவி: செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...

Tamil Health Update : பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரை ஸ்ட்ரெச்சரில் இடது பக்கம் சாய்த்து, வலது காலை வளைத்து, கையை முகத்தை தாங்கி கொண்டு செல்லவும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரே நேரத்தில் 3 பாம்பு… அபாய விளையாட்டு… எச்சரிக்கை வீடியோ!

Tamil Lifestyle Update : மனித இனம் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தககூடியது பாம்புகள். பொதுவாக அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் பாம்புகள் அதிகம் காணப்படும். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு உலகின் உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் பாம்புக்கடி, அங்கிகரிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

உலக சுகாதார மையத்தின் கூற்றுபடி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடி வாங்கியவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியன் (54 லட்சம்) வரை இருக்கும் என்றும், உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 81,000 முதல் 1,38,000 பேர் பாம்புக்கடியால் மரணத்தை சந்திக்க நேரிடுவதாகவும், மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் வாழும் பெரும்பாலான பாம்புகள் விஷத்தன்மையற்றவைகளாக இருந்தாலும், ஒரு பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்பது அவசியம்

பாம்பு விஷம் என்றால் என்ன?

பாம்பு விஷம் என்பது உண்மையில் உமிழ்நீர் சுரப்பு, இது பாம்பு தனக்கான இரையைக் கொல்லவும் இரை உடனடியாக ஜீரணிக்கவும் பயன்படுகிறது. அடிப்படையில், இரண்டு வகையான பாம்பு விஷம் உள்ளது-. இதில் ஒன்று நரம்புகளை பாதிக்கிறது (உதாரணமாக, நாகப்பாம்பு விஷம்), மற்றொன்று இரத்தத்தை பாதிக்கிறது (வைப்பர்களின் விஷம்).

பாம்பு கடித்தால் நீங்கள் எடுக்கக்கூடிய சில தீர்வு நடவடிக்கைகள்

ஆம்புலன்ஸை அழைக்கவும்

பாம்பு கடித்தால் உடனடியாக ஒரு மருத்துவ நிபுணரை அணுகி, பாம்பின் தோற்றத்தை முடிந்தவரை துல்லியமாக விவரிக்க முயற்சிக்கவும். இது அடுத்தகட்ட நடவடிக்கையைத் திட்டமிட அவர்களுக்கு உதவும். பாம்பு கடித்தது விஷமாக இல்லாவிட்டாலும், அந்த நபர் பாக்டீரியா தொற்று அல்லது டெட்டனஸ் நோயால் பாதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர் அசையாமல் இருக்க வேண்டும்

பாம்பு கடித்தவுன் கடித்த பகுதி வீங்கிவிடும் என்பதால், பெல்ட், நகைகள், வாட்ச், மோதிரங்கள் போன்றவற்றை கழற்றிவிட வேண்டும்.

பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரை ஸ்ட்ரெச்சரில் இடது பக்கம் சாய்த்து, வலது காலை வளைத்து, கையை முகத்தை தாங்கி கொண்டு செல்லவும். இதனால் நோயாளி நன்றாக சுவாசிப்பார் மற்றும் வாந்தியால் மூச்சுத் திணறமாட்டார்.

மிகவும் இறுக்கமாக கட்டப்பட்டால் தீங்கு விளைவிக்கும் மற்றும் இது குடலிறக்கத்திற்கு வழிவகுக்கும் என்று SheIndia.org இன் தலைவரும் நிறுவனருமான பிரியங்கா கடம் இந்தியன் எக்பிரஸிடம் தெரிவித்தார். "ஆனால், பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இரத்த நாடியை கட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தால், மருத்துவர்கள் முதலில் நோயாளியின் நிலையை மதிப்பீடு செய்து, விஷத்தன்மையின் அறிகுறிகளைக் கண்டறிய வேண்டும்.

கடித்த இடத்தில் வீக்கம், குமட்டல், கண் இமைகள் தொங்குதல் (ptosis), சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, வயிற்று வலி, பக்கவாட்டில் தலை புரட்டுதல் (உடைந்த கழுத்து நோய்க்குறி) இந்த அறிகுறிகள் ஏதேனும் நோயாளிகள் இருந்தால் முழு இரத்த உறைதல் சோதனை செய்ய வேண்டும். மருத்துவர் ஆதரிக்கும் மருந்துகளுடன் விஷத்தன்மையை எதிர்க்கும் மருந்ததை கொடுக்க வேண்டும் வேண்டும், அதன் பிறகுதான் இரத்த நாடிக்கட்டை மிக மெதுவாக அகற்ற வேண்டும், ”

ஏனென்றால், நோயாளி நச்சுத்தன்மையுள்ளவராகவும், இறுக்கமான கட்டை பெற்றிருந்தால், கட்டை அகற்றப்பட்டவுடன், முக்கிய உறுப்புகளுக்கு திடீரென விஷம் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம். “பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் மருத்துவர்கள் குறைந்தது 24 மணிநேரம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். பல சமயங்களில், உயிருடன் இருக்கும் அல்லது இறந்த பாம்புகளை அடையாளத்திற்காக கொண்டு வருகிறார்கள்.

publive-image

மாறாக, தலை மற்றும் முழு உடலிலிருந்தும் ஒரு தெளிவான விளக்கம் குறித்து சமூகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். உயிருள்ள அல்லது இறந்த பாம்பு சமமாக ஆபத்தானது. இறந்த பாம்பு கடித்தால் கூட இறப்புகள் பதிவாகியுள்ளன, ”என்று அவர் கூறினார்.

பாம்பு கடித்தால் செய்யக்கூடாதவை

பீதியடைய வேண்டாம். பாம்புக்கடி சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை உள்ளது.

நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம் என்று சொல்லுங்கள். பாம்பை கொல்லவோ பிடிக்கவோ முயற்சிக்காதீர்கள்.

பாம்பு கடித்த இடத்தை வெட்டவோ உறிஞ்சவோ கூடாது.

இரத்த நாடிகளை கட்ட வேண்டும்.  ஐஸ் போடாதீர்கள் அல்லது கடித்த இடத்தில் மசாஜ் செய்யாதீர்கள், அது மேலும் சேதத்தை ஏற்படுத்தும்.

சுய மருந்து அல்லது மூலிகைகள் அல்லது மசாலாப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். எதுவும் உதவாது.

பாம்புக்கடியை தவிர்ப்பது எப்படி?

வெளியே செல்லும் போது மூடிய காலணிகளை அணியவும்.

எப்போதும் இரவில் டார்ச் பயன்படுத்தவும். உங்கள் கை அல்லது கால் எங்கே வைத்தீர்கள் என்று பாருங்கள்.

தரையில் உறங்குவதைத் தவிர்த்து, நன்றாகக் கட்டப்பட்ட கொசுவலையைப் பயன்படுத்தவும்.

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், வைத்திருங்கள். கொறித்துண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும்.

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பாம்புக்கடியைத் தடுக்க உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment