Advertisment

ஃப்ரெஷ்ஷா அப்படியே இருக்கும்: ஒரு வாரம் ஆனாலும் இட்லி மாவு புளிக்காமல் இருக்க வழி!

Tamil samayal tips:என்ன? இந்த 10 பாயிண்ட்களையும் குறித்து வைக்கத் தயாராகிவிட்டீர்களா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃப்ரெஷ்ஷா அப்படியே இருக்கும்: ஒரு வாரம் ஆனாலும் இட்லி மாவு புளிக்காமல் இருக்க வழி!

Tamil Recipe News, idli dosa batter making Tamil Video: வேலைக்கு செல்கிறவர்கள் வீட்டில் தினமும் இட்லி மாவு அரைத்துக் கொண்டிருக்க முடியாது. வெளியே வாங்கினால், நான் நினைக்கிற அளவுக்கு சுத்தமாகவும் தரமாகவும் இருக்குமா? என்கிற கவலை! எனவே வாரம் ஒரு நாள் மாவு அரைத்து அதை வாரம் முழுவதும் பயன்படுத்த வேண்டிய நிலையில் நம்மில் பலர் இருக்கிறோம்.

Advertisment

அப்படி பயன்படுத்தும்போது முதல் 2 நாட்கள்தான் அதிகபட்சமாக இட்லி அவிக்க முடிகிறது. அதற்குள் மாவு அதிகமாக புளித்துவிடுவதால், அடுத்த 4 நாட்களுக்கு தோசையே கதியாகிப் போகிறது. இதற்கு தீர்வு இல்லையா? நிச்சயம் இருக்கிறது. மாவு அரைக்கும்போது இந்த சிம்பிள் வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்.

Idli dosa batter making Tamil Video: இட்லி மாவு புளிக்காமல் இருக்க- தமிழ் வீடியோ

1. மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை கிரைன்டரை நன்கு கழுவுங்கள். நாம் என்ன தான் முந்தைய முறை கிரைன்டரை கழுவியிருந்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைன்டரில் ஒட்டியிருக்கும். எனவே இந்த முறை கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.

2. அரிசி, உளுந்து ஆகியவை குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் புளித்து போக வாய்ப்பு உள்ளது.

3. உளுந்தை நீங்கள் அரைக்கும்போது கை படக்கூடாது. தண்ணீர் இடையிடையே தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி எடுத்து தள்ளி விட்டு அரைக்கலாம். கையை மட்டும் பயன்படுத்த வேண்டாம்.

4. உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் மட்டும் தான் நாம் கையால் மாவை எடுப்போம்.

5. மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் சிறந்த தேர்வாக இருக்கும். எவர்சில்வரை விட பிளாஸ்டிக்கில் மாவை எடுத்தால் விரைவில் புளிப்பது இல்லை.

6. அடுத்து அரிசி அரைக்க 15 நிமிடம் போதுமானது. அரிசி அரைத்து முடித்ததும் மாவை எடுக்க வேண்டாம். நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு 5 நிமிடம் அரைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியமில்லை.

7. அப்படி 5 நிமிடம் அரைத்ததும், கிரைண்டரை தனியே எடுத்து மாவு ஸ்டோர் செய்யும் பாத்திரத்தில் அப்படியே கவிழ்த்து கை வைக்காமல் கொட்டிக் கொள்ளுங்கள். கடைசியில் இருக்கும் சிறிதளவு மாவை அப்படியே விட்டு விடுங்கள்.

8. பாத்திரத்தில் எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். மீத மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கைகளால் எடுத்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த குறைந்த அளவு மாவுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு புளிப்பதற்கு சுமார் 8 மணி நேரமாவது ஆகும். மறுநாள் காலையில் இந்த மாவில் இட்லி அவித்தால் பஞ்சுபோல் இட்லி வரும்.

9. ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்த மாவை எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து உப்பு சேர்த்து கலந்து விடுங்கள். இட்லி அவிப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே மாவை வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் தேவையான அளவிற்கு மாவு புளிக்கும்.

இந்த முறையில் ஒரு வாரத்திற்கு மேல் ஆனாலும் மாவு புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் ஒருமுறை மாவு அரைத்து பாருங்கள். பிறகு இந்த முறையை விடமாட்டீர்கள்.

10. ஒருவேளை எப்படியோ மாவு புளித்து ஆகிவிட்டது. அப்போ என்ன செய்வது?

புளித்த மாவில் சிறிதளவு அரிசி மாவு அல்லது பால் சேர்த்து தோசை வார்த்தால் புளிப்பு தெரியாது. புளித்த மாவில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிதளவு வெங்காயம், பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை போட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து தோசை வார்த்தாலும் வித்தியாசமான சுவையில் புளிக்காத தோசை நமக்கு கிடைக்கும்.

என்ன? இந்த 10 பாயிண்ட்களையும் குறித்து வைக்கத் தயாராகிவிட்டீர்களா?

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment