Advertisment

என்றென்றும் புன்னகை சீரியல் நடிகருக்கு, கயல் சீரியல் நடிகையுடன் திருமணம்! போட்டோஸ் வைரல்!

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கல்யாண சீசன் ப்ரொமோ வைரலாகியது. அதில் அனைத்து சீரியல்களின் ஜோடிகளும் வரிசையாக திருமணம் செய்தனர்.

author-image
WebDesk
New Update
abinavya Deepak wedding photos

Tamil serial actor Deepak and abinavya pre wedding photos viral

ரேஷ்மா முரளிதரன் – மதன் பாண்டியன், பார்வதி ஷபானா- ஆர்யன், சித்து –  ஸ்ரேயா, பிரவீன் தேவசகாயம் - ஐஸ்வர்யா ஆகிய சின்னத்திரை ஜோடிகள் சமீபத்தில் திருமணம் செய்தனர். இவர்களின் வரிசையில் இப்போது தீபக்- அபிநவ்யா ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

Advertisment

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும், கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி எந்த முன்னறிவுப்பும் இல்லாமல், எளிதாக திருமணம் செய்து கொண்டனர்.

அடுத்த ஓரிரு தினங்களிலே, ரேஷ்மா முரளிதரணும்- மதன்பாண்டியனும் திருமணம் செய்தனர். பூவே பூச்சூட வா சீரியலில் நடிக்கும் போது, ரேஷ்மாவுக்கு, மதனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, திருமணம் சீரியலில் கணவன் – மனைவியாக நடித்த சித்துவும், ஸ்ரேயாவும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்தனர். சித்து திருமணம் சீரியலில், எடுத்த புகப்படத்தையும், அவர்களின் உண்மையான கல்யாண படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிறகு, ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த பிரவீன் தேவசகாயம் – ஐஸ்வர்யா ஜோடி சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அதேபோல”சரஸ்வதியும் தமிழும்” சீரியலில் நடிக்கும் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை நக்ஷ்த்திரா நாகேஷ் தனது பலநாள் காதலர் ராகவை கரம்பிடித்தார்.

இவர்களின் வரிசையில் இப்போது சின்னத்திரையில் நடிக்கும் தீபக்- அபிநவ்யா ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

தீபக் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் மூலம் விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இவரும் சீரியல் நடிகை அபிநவ்யா-வும் கடந்த ஓராண்டுக்கு மேல் காதலித்து வந்தனர். செய்தி வாசிப்பாளரான அபிநவ்யா, தனது திறமை மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி,  பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில், ஆனந்தி என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சோஷியல் மீடியா மூலம், தாங்கள் காதலிப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இவர்கள் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, இரு வீட்டார் முன்னிலையிலும் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலானது.

இந்நிலையில் தீபக்-அபிநவ்யா ஜோடி இம்மாதம் 27 ஆம் தேதி சென்னையில் உள்ள மண்டபத்தில், திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்கான சடங்குகள் இப்போது தொடங்கி இருக்கிறது. அந்த வீடியோக்களை அபி நவ்யா மற்றும் தீபக் தங்களுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளனர்.

வீடியோ, புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்போது புதுமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment