Advertisment

15 நிமிடத்தில் இட்லி சாம்பார்... ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இப்படி செய்து பாருங்க!

Tamil Recipe Update : இட்லி சாம்பார் செய்யும்போது அதில் கவனக்குறைவு ஏற்பட்டால் இட்லி மீதான ஆர்வத்தையே குறைத்துவிடும் நிலை கூட ஏற்படலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
15 நிமிடத்தில் இட்லி சாம்பார்... ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இப்படி செய்து பாருங்க!

Tamil Recipe Idli Sambar Making Easy Way : தென்னிந்தியாவில் பிரபலமாக உணவுகளில் இட்லி – சாம்பார்க்கு தனி இடம் உண்டு. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லி சாம்பார் பெரும்பாலும் பல இல்லங்களில் காலை உணவாக உட்கொள்ளப்படுகிறது. ஆனாலும் உணவு பிரியர்கள் பலரும் எந்த நேரத்திலும் இட்லி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் இட்லி அதன் தனி சுவையை உணரலாம் என்று கூறுவார்கள்.

Advertisment

பாரம்பரிய உணவு என்றாலும் இட்லி சாம்பார் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. வயிற்றை எளிதாக மாற்றும் இட்லி சாம்பார் மன திருப்தி அளிக்கிறது. ஆனால் இட்லி சாம்பார் செய்யும்போது அதில் கவனக்குறைவு ஏற்பட்டால் இட்லி மீதான ஆர்வத்தையே குறைத்துவிடும் நிலை கூட ஏற்படலாம். இதனால் இட்லி சமைக்கும்போதும் அதற்கான மாவை அரைக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

இட்லி மற்றும் சாம்பார் சரியான முறையில் செய்வது எப்படி?

'குக் வித் பாருல்' என்ற யூடியூப் சேனலில், ஃபுட் வோல்கர் பாருல் பகிர்ந்துள்ள ரெசிபி, ஹோட்டல் ஸ்டைலில் 15 நிமிடங்களில் இட்லி சாம்பார் செய்வது எப்படி என்பதை பகிர்ந்துள்ளார்.  

இட்லிக்குத் தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

தயிர் - 1 கப்

உப்பு

எண்ணெய்- 2 தேக்கரண்டி

ஈனோ பழ உப்பு - 1 சாக்கெட் அல்லது பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி

செய்முறை:

ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்க்கவும் அதே அளவு தயிரை எடுத்து ரவையில் சேர்க்கவும். ரவை மற்றும் தயிர் சமஅளவில் இருப்பதை உறுதிப்படுத்தவும்

இட்லி மென்மையாக இருக்க மாவில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இவை அனைத்து பொருட்களை ஒன்றாக கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

சிறிது நேரத்திற்கு பிறகு இந்த கலவை வழக்கமான இட்லி மாவு கலவையைப் போன்ற நிலைத்தன்மையை உருவாக்க தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்கவும்.

அதன்பிறகு மாவில் ஈனோ பழ உப்பு அல்லது பேக்கிங் சோடாவைச் சேர்த்து, அதைச் செயல்படுத்துவதற்கு தண்ணீர் சேர்க்கவும். அதன்பிறகு நெய் தடவிய இட்லி மாவை நெய் தடவிய இட்லி தட்டுகளில் ஊற்றவும்.

ஒரு ஸ்டீமரில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, இட்லி தட்டுக்களை முன்கூட்டியே சூடாக்கப்பட்ட ஸ்டீமரில் வைக்கவும். அதன்பிறகு 14-15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

ரவா இட்லி தயாராக உள்ளதா என்பதைச் சரிபார்க்க, இட்லியில் ஒரு சிறிய குச்சியை எடுத்து குத்துங்கள். குச்சி மாவு இல்லாமல் சுத்தமாக வெளியே வந்தால் இட்லி தயார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதன்பிறகு ஸ்டீமரில் இருந்து இட்லி தட்டுக்களை எடுத்து ஆறவிடவும். சில நிமிடங்களுக்குப் பிறகு இறக்கவும்.

சாம்பாருக்கு தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - ½ தேக்கரண்டி

கீல் - 2 சிட்டிகை

வெந்தய விதைகள் - ¼ தேக்கரண்டி

கறிவேப்பிலை

வெங்காயம் - 1 பெரியது

பச்சை மிளகாய் - 4

தக்காளி - 2 பெரியது

காய்கறிகள் (உங்கள் விருப்பப்படி) - ஒவ்வொன்றும் ¼ கப்

மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்

துவரம் பருப்பு - ¼ கப்

தண்ணீர் - 3 கப்

புளி தண்ணீர் - ¼ கப்

நறுக்கிய கொத்தமல்லி

காய்ந்த மிளகாய் -2

செய்முறை:

குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அடுத்து கடுகு சேர்க்கவும். கடுகு பொறிந்தவுடன் சீரகத்தை சேர்க்கவும் அடுத்து கீல், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வேக விடவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும் அதன்பிறகு கீறிய பச்சை மிளகாய்,நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் நன்றாக வதக்கவும்

தக்காளி மென்மையாக வந்ததும், உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்க்கவும். பூசணி, கேரட், பீன்ஸ் மற்றும் சுரைக்காய் ஆகியவற்றை ¼வது கப் அளவுகளில் சேர்க்கலாம்.

அவற்றை ஒன்றாகக் கலந்து, மற்றொரு நறுக்கிய வெங்காயத்தை மிக்ஸியில் சேர்க்கவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்க்கவும்.

அடுத்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்த துவரம்பருப்பை சேர்க்கவும். அதன்பிறகு, குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

கலவையில் புளி தண்ணீர் சேர்க்கவும். புளி தண்ணீர் இல்லாவிட்டால், எலுமிச்சை சாறு அல்லது ஆம்சூர் பொடியை மாற்றாக பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் சேர்த்த பிறகு குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரும் வரை சமைக்கவும்.

அதன்பிறகு குக்கரில் வாயுவை அணைத்து, அதை குளிர்விக்க விடவும் ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி காய்கறிகளை மசிக்கவும். அடுத்து நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

அதன்பிறகு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். சுவையான இட்லி சாம்பார் தயார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Idli Recipe Tamil Recipe Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment