கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்விகமாகக் கொண்ட மீரா கிருஷ்ணா தனது அற்புதமான நடிப்பால் தமிழ் மற்றும் மலையாள சீரியல் உலகில் நன்கு பிரபலமானவர். தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.
2003 ஆம் ஆண்டு ராஜீவ் விஜய் ராகவன் இயக்கிய ‘மார்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீரா ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்த மீரா, பிரபல மலையாள சேனலான சூர்யா டிவியில்’ தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார்.
மலையாளத்தில்’ ஸ்த்ரீஹிருதயம், தேவி மஹாத்மியம், கூடும் தேடி, தயா, மூணுமணி, பொக்கிஷம் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக நன்கு அறியப்பட்டார். இப்போது தமிழில்’ சித்தி 2 சீரியலில் நடிக்கிறார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இப்படி மீரா கிருஷ்ணா பிஸியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ், சீரியல் ஷூட் என அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அப்படி அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் மீரா ஸ்கூல் யூனிஃபார்மில், பாப் கட்டிங்குடன் பார்க்க பள்ளி மாணவியை போலவே இருக்கிறார்.
அதைப்பார்த்த நெட்டிசன்ஸ்’ இது வேற யாரோ என்று நினைத்தேன், யாருப்பா இது இவ்ளோ கியூட்டா, யாரிந்த பையன், 10ஆம் வகுப்பா 12 ஆம் வகுப்பா?' என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவ பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“