நாட்டின் பல பகுதிகளில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் வியாழக்கிழமை ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 10 உயர்ந்து ரூ. 100க்கு விற்பனையானது.
Advertisment
மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதால், மக்கள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று கூறினார்.
ஆந்திராவிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து அம்மாநில வேளாண் துறை அமைச்சர் கக்கனி கோவர்தன் கூறுகையில்; தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால், பிற மாநிலங்களில் இருந்து தக்காளியை அரசு இறக்குமதி செய்கிறது. இது மே 20 முதல் அனைத்து ரைத்து பஜார்களிலும் நியாயமான விலையில் தக்காளி விற்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரையில் சைவம், அசைவம் இரண்டு உணவுகளிலும் தக்காளி விரும்பி சேர்க்கப்படுகிறது. இதனால் இந்த விலை உயர்வு சாதாரண மக்களிடையே மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி விலை உயர்வு குறித்து மக்கள் இணையத்தில் பல்வேறு வகையான மீம்ஸ் மற்றும் ஜோக்குகளை பகிர்ந்து வருகின்றனர். இங்கே பாருங்க!
இந்த மீம்ஸ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“