விநாயகர் சதுர்த்தி என்றாலே நமக்கு முதலில் நினைவு வருவது கொழுகட்டைத்தான். 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பல விஷயங்கள் நாம் சாப்பிட்டாலும், கொழுகட்டைக்கு எப்போதும் இடம் இருக்கும். இந்நிலையில் அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை பிரத்யேகமாக செய்யப்படும் கொழுகட்டை ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை -1 கப்
நெய்/அல்லது பட்டர்-1 டேபிள் ஸ்பூன்
பூரணத்திற்கு தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய்- 1கப்
வெல்லம்- 1 கப்
எலக்காய் பொடி-1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு- ¼ கப்
ட்ரை ஃபுரூட்ஸ் – அரை கப்
வறுத்த எள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை;
கோதுமை மாவு, நெய் மற்றும் உப்பு , தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும். மாவு நன்றாக பிசைந்தவுடன். அதை துணி போட்டி மூடி வைக்கவும்.
பாத்திரம் நன்றாக சூடாக்கியதும், அதில் துருவிய தேங்காய், வெல்லம், சேர்க்கவும். தொடர்ந்து கடலை மாவு சேர்த்து கிளரவும். ட்ரை ஃபுரூட்ஸ் சேர்த்து கிளரவும். மேலும் வறுத்த எள்ளு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளரவும். தற்போது பூரணம் தயார். இதை நன்கு ஆரவிடவும். கொழுகட்டை மாவை உருண்டையாக பிடித்துகொள்ளவும், தற்பொது இந்த பூரணத்தை எடுத்து தயார் செய்து வைத்திருக்கும் கொழுகட்டை உருண்டைக்குள் வைத்து மீடவும். கொஞ்சம் தண்ணீர் தொட்டு இந்த உருண்டைகளை மூடலாம். தற்போது இதை நெய் அல்லது எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil