இண்டிகோ விமானத்தை முதன்முறையாக இயக்கிய விமானி, தனது தாய் மற்றும் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாட்டியின் காலில் ஆசிர்வாதம்:
நமது குடும்பங்களில் வழக்கமாக சொல்லும் ஒரு டையலாக் எதுவென்றால் பையன் என்றால் அவன் அம்மா செல்லம்..மகள் என்றால் அவள் அப்பா செல்லம். ஆனால் இவர்களை ஒரு விட ஸ்பெஷல் உறவு எதுவென்றால் அது தாத்தா பாட்டி உறவு.
எத்தனையோ வீடுகளில் தாத்தா, பாட்டியையே தனது நண்பர்களாக நினைத்து அவர்களிடம் அன்பை பொழியும் பேரன், பேத்திகளும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தனது பாட்டி மீது அதிகப்படியான மரியாதை மற்றும் அன்பை வெளிக்காட்டு வகையில் இண்டிகோ விமானி ஒரு செயலை செய்துள்ளார்.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற இண்டிகோ விமானத்தை முதன்முறையாக இயக்கிய பைலட் பிரதீப் கிருஷ்ணன், விமானத்தில் தாயும் பாட்டியும் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருக்க அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.அவர்களிடம் ஆசிர்வாதம் வாக்கிய பின்னரே விமானத்தையும் இயக்கியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். இதில் கவனிக்கதக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிரதீப் கிருஷ்ணன் சிறுவயது முதலே தான் இயக்கும் முதல் விமானத்தில் தாய் மற்றும் பாட்டி கண்டிப்பாக வரவேண்டும் என்று அடிக்கடி கூறியிருக்கிறார்.
அந்த கனவை முறையான பைலட் ஆன பின்பு செய்து காட்டிருக்கிறார். இதுக்குறித்து பேசிய பைலட் பிரதீப், ”நான் பைலட் ஆன முதல் பயணத்தில், எனது தாய் மற்றும் பாட்டியுடன் பயணம் செய்தது மிகுந்த சந்தோசத்தை அளித்தது. மேலும் விரைவாக சிங்கப்பூர் சென்றடைந்தேன். எனது குடும்பத்தினர் அனைவரும் எனது முதல் பயணத்தில் இருந்த தருணம் எங்களுக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. எனது தாயுக்கும் பாட்டிக்கு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் என்னுடன் பயணித்தனர்” என்றார்.
.