Advertisment

வெறும் புத்தகங்களை மட்டும் அல்ல... அன்பையும் பரிமாறும் 83 வயது புக் ஸ்டால்!

Chennai Tamil News: சென்னையில் மயிலாப்பூரில் உள்ள 83 வயதான புத்தகக் கடையின் சிறப்பம்சத்தைப் பற்றின தொகுப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வெறும் புத்தகங்களை மட்டும் அல்ல... அன்பையும் பரிமாறும் 83 வயது புக் ஸ்டால்!

அம்மு ஆழ்வார் (வயது 42), மயிலாப்பூரில் உள்ள 'ஆழ்வார் புத்தகக்கடை'யின் உரிமையாளர் (Express Photo)

Chennai Tamil News: சென்னையில் உள்ள மயிலாப்பூரில் யாரை கேட்டாலும் வழிகாட்டக் கூடிய அளவிற்கு பிரபலமான விளங்குகிறது 'ஆழ்வார் புத்தகக் கடை'. சென்னையிலேயே சிறந்த புத்தகக் கடை என்று அங்கு வசிக்கும் மக்கள் அழைக்கின்றனர்.

Advertisment

கடைக்கு முன் இருக்கும் நடைபாதையில் ஏராளமான புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளது. சைன்போர்டு இல்லாத ஒரு பெரிய கொட்டகை போன்ற அமைப்பு கொண்டிருக்கும் இந்த கடையை ஆர்.கே.ஆல்வாரின் மகள் அம்மு ஆல்வார் (வயது 42), நடத்தி வருகிறார்.

publive-image

இந்த கடை 1939 இல் தொடங்கப்பட்டது, இப்போதும் தினமும் குறைந்தது 60 வாடிக்கையாளர்களிடையே விற்பனை செய்து வருகிறது. டேவிட் பால்டாச்சியின் 'தி கேமல் கிளப்', கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'பொன்னியின் செல்வன்' புத்தகத்திலிருந்து ஜாவா அடிப்படைகள் ஆகிய புத்தகங்கள் வரை இங்கு கிடைக்கிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் போன்ற பல்வேறு மொழிகளில் இங்கு புத்தகங்கள் கிடைக்கிறது.

2018 இல் மறைந்த தனது தந்தை, தான் பயன்படுத்திய புத்தகங்களை விற்று இந்த கடையைத் தொடங்கினார் என்று அம்மு ஆல்வார் கூறுகிறார்.

திரையுலகில் சேர வேண்டும் என்ற கனவோடு ஊருக்கு வந்து சில படங்களில் நடித்த ஆழ்வார், வாழ்வாதாரத்திற்காக இந்தப் புத்தகக் கடையை அமைத்தார்.

publive-image

மயிலாப்பூரில் உள்ள திறந்த புத்தகக் கடை ‘ஆழ்வார் கடை’ (Express Photo)

சில வருடங்களுக்கு முன்பு பெரியதாக இருந்த புத்தகக் கடையில், தானும் தனது தங்கைகளுடன் சேர்ந்து வளர்க்கப்பட்டதாக அம்மு கூறுகிறார். “இந்தக் கடைதான் நாங்கள் குடியிருந்தோம். 2002 இல் தான் நாங்கள் ஒரு வீட்டிற்கு மாறினோம், ”என்று அவர் கூறுகிறார்.

அம்மு ஆழ்வாரும் அவரது சகோதரி ஜூலி ஆல்வாரும் கடையை நிர்வகிக்கிறார்கள். அதை அவர்கள் 'சரஸ்வதி வாழும் இடம்' (சரஸ்வதி தெய்வம் வசிக்கும் இடம்) என்று அழைக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில், ஆழ்வார் தனது கடைக்கு அருகிலுள்ள நடைபாதையில் தங்கியிருப்பதால், அவர் இரவு 11 மணிக்கு கடையை மூடிவிட்டு, மறுநாள் காலை அருகிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் குளித்து காலை 6 மணிக்கு கடையைத் திறப்பார் என்று அம்மு கூறினார். அதனால் அவருக்கு அவருடைய புத்தகக் கடை மிகவும் பிரியமானது என்று கூறுகிறார்.

ஆனால், தற்போது மின் இணைப்பு இல்லாததால் மாலை 6 மணிக்குள் கடையை அடைத்து விடுவதாக அம்மு தெரிவித்தார்.

பல அரசு ஊழியர்கள் தங்கள் கடையில் புத்தகங்களை வாங்கி படிப்பதாக அம்மு கூறினார். "இன்றளவும் அவளிடம் வந்து, என் தந்தை விற்ற புத்தகங்களைப் பயன்படுத்தி தாங்கள் படித்ததாக மக்கள் கூறுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஆழ்வார் கடையில் உள்ள அனைத்து புத்தகங்களும் அசலில் இருந்து பாதி விலைக்கு விற்கப்படுகின்றன என்றார் அம்மு. தன் வாழ்க்கையை சமாளிக்க சிரமப்பட்டாலும், தங்கள் கடைக்கு புத்தகங்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்கிறார். முன்னாள் தமிழக முதல்வரும், திராவிட இயக்கத் தலைவருமான சி.என்.அண்ணாதுரைக்கு ஆழ்வார் உணவளித்தார்.

“எனக்குத் தெரிந்தவரை, என் தந்தை கூட கடையில் அதிகம் சம்பாதிக்கவில்லை. அவர் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பாதித்தால், அதற்கு பதிலாக ஒரு லட்சத்திற்கு புத்தகங்களை வாங்குவார்", என்று அவர் கூறுகிறார்.

"ஒரு வீட்டை வாங்குவதற்கு போதுமான பணத்தை சேமிக்கவில்லை என்று நாங்கள் என் தந்தையை திட்டுவோம், ஆனால் அவர் எப்போதும் புத்தகங்கள் வாங்குவது மிக முக்கியமான விஷயம் என்று கூறுவார். இப்போது நானும் அக்காவும் அந்தத் தொழிலைக் கையிலெடுத்தபோது புத்தகங்கள் வாங்குவதில் உள்ள காதலை நாங்கள் புரிந்துகொண்டோம்” என்கிறார் அம்மு.

சில புத்தகங்கள் உடனடியாக விற்பனையாகவில்லை என்றாலும், பிற்காலத்தில் யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என்று அம்மு கூறுகிறார்.

“எங்களுக்கு கடைக்கு சிறந்த பாதுகாப்பு தேவை. மழைக்காலத்தில் புத்தகங்கள் நனையும் போது, ​​தார்ப்பாய் ஷீட்களை கீழே இழுப்பதுதான் எங்களால் செய்ய முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment