Advertisment

'குடிசைக்குள் கால் வைப்பான்- தேர்தல் முடிந்தால் உன் கூரைக்கு தீ வைப்பான்'- தேர்தல் கவிதை

கவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Repoll, Tamil Nadu Repoll in 13 Booths, தமிழ்நாடு மறு வாக்குப் பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

Tamil Nadu Repoll, Tamil Nadu Repoll in 13 Booths, தமிழ்நாடு மறு வாக்குப் பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

கவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது!

Advertisment

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

தேளின் கொடுக்கில்

தேன் வரும் என்பான்

தெருக் குழாயில்

பால் வரும் என்பான்

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

காலென்று சொல்லி உன்

கையை பிடிப்பான்

காரியம் ஆனதும்

கழுத்தையே நெரிப்பான்

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

குடிசைக்குள் கால் வைப்பான்

குழந்தைக்கும் பேர்வைப்பான்

தேர்தல் முடிந்தால் உன்

கூரைக்கு தீ வைப்பான்

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

விவசாயி தினக்கூலி

குறை கேட்டு கதறிடுவான்

கும்பிட்டு ஜெயித்து விட்டால் உன்

கோவணத்தை உருவிடுவான்

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

கல் வெச்ச மூக்குத்தி

கணிசமான தொகை தருவான்

அவன நம்பி வாக்களிச்சா

தாலிக்கொடி அறுத்திடுவான்

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

ஆராய விடாம உனக்கு

சாராயம் தர பார்ப்பான்

ஆகாது நாளை அவன்

ஜனநாயகத்தை கொலை செய்வான்

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

தேர்தலென்று வந்து விட்டால்

நீயே தான் எஜமானன்

சபலம் கொண்டு சாயாதே அது

அஞ்சு வருஷத்துக்கு அவமானம்!

(கவிஞர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர்)

 

Poem K Chandrakala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment