Advertisment

என் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்

விண்மீன்கள் நிறைந்த வானம், நீர் நடனமாடும் நீர்வீழ்ச்சிகள், விளைவு மிக்க வயல் ஓரங்கள் வானவில்லை உருவாக்கும் மழைத்துளிகள்... - கே.எம்.ஆதர்ஷா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
my land, tamil poem, tamil kavithai, km adharsha poem, என் பூமி, கவிதை, கேஎம் ஆதர்ஷா, tamil literature, my land poem,

கே.எம்.ஆதர்ஷா, அருமனை, கன்னியாகுமரி மாவட்டம்.

Advertisment

விண்மீன்கள் நிறைந்த வானம்

நீர் நடனமாடும் நீர்வீழ்ச்சிகள்

விளைவு மிக்க வயல் ஓரங்கள்

வானவில்லை உருவாக்கும் மழைத்துளிகள்

பச்சை பசேலென்று காட்சியளிக்கும் மரங்கள்

கடற் காற்று வீசும் கடற்கரைகள்

நிம்மதி நிறைந்திருக்கும் மலை அடி வாரங்கள்

மகிழ்ச்சியாய் பறக்கும் வண்ணப் பறவைகள்

ஆச்சரியமூட்டும் வெவ்வேறு விலங்குகள்

காற்றில் உலாவரும் பூக்களின் நறுமணம்

அனைத்தும் விளையும் பொன்னான மண்

பன்முகத் திறன் கொண்ட மனிதர்கள்.

இவை அனைத்தும் கலந்ததே

என் பூமியாகும்

அதை,

உங்கள் மனம் கொண்டும்

செயல் கொண்டும்

மாசு படுத்தாதீர்கள்

பூமியை நேசிப்போம்

பூமித்தாயை துன்புறுத்தாமல் இருப்போம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Poem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment