கே.எம்.ஆதர்ஷா, அருமனை, கன்னியாகுமரி மாவட்டம்.
விண்மீன்கள் நிறைந்த வானம்
நீர் நடனமாடும் நீர்வீழ்ச்சிகள்
விளைவு மிக்க வயல் ஓரங்கள்
வானவில்லை உருவாக்கும் மழைத்துளிகள்
பச்சை பசேலென்று காட்சியளிக்கும் மரங்கள்
கடற் காற்று வீசும் கடற்கரைகள்
நிம்மதி நிறைந்திருக்கும் மலை அடி வாரங்கள்
மகிழ்ச்சியாய் பறக்கும் வண்ணப் பறவைகள்
ஆச்சரியமூட்டும் வெவ்வேறு விலங்குகள்
காற்றில் உலாவரும் பூக்களின் நறுமணம்
அனைத்தும் விளையும் பொன்னான மண்
பன்முகத் திறன் கொண்ட மனிதர்கள்.
இவை அனைத்தும் கலந்ததே
என் பூமியாகும்
அதை,
உங்கள் மனம் கொண்டும்
செயல் கொண்டும்
மாசு படுத்தாதீர்கள்
பூமியை நேசிப்போம்
பூமித்தாயை துன்புறுத்தாமல் இருப்போம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"