Advertisment

பொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

A debate on what ails the economy: வணிக பிரச்னைகளிலிருந்து நுணுக்கமான பார்வை இல்லாமல் பேரியல் பொருளாதர ஆய்வுகளின் பரவைப் பார்வை இல்லை. மக்கள் 5 சதவீதம், 5 சதவீதம் என்றும் அதைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவுமில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் விவாதிப்பதற்கு இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Economical Status, Indian Economics, இந்திய பொருளாதாரம், பொருளாதாரப் பின்னடைவு, economy slowdown, investment, sebi, diwali, non performing assets, gdp growth, Tamil indian express

Economical Status, Indian Economics, இந்திய பொருளாதாரம், பொருளாதாரப் பின்னடைவு, economy slowdown, investment, sebi, diwali, non performing assets, gdp growth, Tamil indian express

A debate on what ails the economy: வணிக பிரச்னைகளிலிருந்து நுணுக்கமான பார்வை இல்லாமல் பேரியல் பொருளாதர ஆய்வுகளின் பரவைப் பார்வை இல்லை. மக்கள் 5 சதவீதம், 5 சதவீதம் என்றும் அதைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவுமில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் விவாதிப்பதற்கு இருக்கிறது.

Advertisment

அங்கே இரண்டு முக்கியமான பிரச்னைகள் இருக்கின்றன. பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது மற்றும் அதை சரிசெய்வதற்கான வழிகள் குறித்து நாம் நேர்மையான விவாதம் நடத்த வேண்டுமானால் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பிரச்னைகள் பலவீனப்படுத்தும் வலியாகவும், பலவீனமாகவும் இருக்கின்றன. இந்தியாவின் பெரும்பகுதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது சரியானதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு எதிர்மறையாக செய்கிற கொள்கை மாற்றங்களும் அரசாங்கத்திடமிருந்து பேசப்படும் கொள்கையும் இந்தியாவின் பெரும்பகுதி நிறுவனங்களை பாதித்திருகின்றன.

இந்திய நிறுவனங்கள் விளம்பரதாரர்களால் இயக்கப்படுகிறது. அதன் பெரும்பகுதி விளம்பரதாரர்களால் (அல்லது பங்குதாரர்கள்) நிர்வகிக்கப்படுகிறது. அங்கே உரிமைக்கும் நிர்வாகத்துக்கு சிறிதளவும் பிளவு இல்லை. முதல் முறையாக விளம்பரதாரர்கள் முற்றுகையிடப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் முக்கியமான நிறுவனங்கள் தோல்வியடைந்துவிட்டன. அல்லது தோல்வியடைப்போகின்றன. அதை கூகிளில் யார் யார் பட்டியலில் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். மற்றும் நான் யார் என்று தெரியவில்லை என்பதுதான் இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. சிக்கலான நிறுவனங்கள் வருவாய் வளர்ச்சியை சிக்கலாக்கியுள்ளன. எனவே இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி எண்ணிக்கையின் அருகிலேயே வருவாய் (வளர்ச்சி) ஆபத்தில் இருக்கிறது. தேசிய நிறுவனங்களின் சட்ட தீர்ப்பாய (என்.சி.எல்.டி) நடவடிக்கைகளில் நிறுவனங்களின் வருவாய் இணைக்கப்பட்டுள்ளது அல்லது அவைகளால் அச்சுறுத்தப்படுவது போன்றவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கடுமையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் ரூ.10 லட்சம் கோடி என்ற பெரிய என்.பி.ஏ (கடன்) தளத்திற்குப் பின் செல்ல அமைப்பு ஒழுங்குபடுத்தப்படுவதால், பெருநிறுவன உணர்வுகளுக்கு இணையான சேதம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் இயல்பான உற்சாகம் தனியாகிவிடுகிறது. கடன்களை(NPA) வரையறுத்து வெளிப்படுத்துவதில் வங்கி கட்டுப்பாட்டாளரின் கடினத்தன்மையைக் கருத்தில் கொண்டு வங்கிகளும் நிறுவனங்களை அந்நியச் செலாவணியைக் கேட்கின்றன. இந்த சூழலில் எதிர்கால முதலீடு பற்றி சிந்திப்பது கடினமானதாக இருக்கிறது. அதனால், உறுதியான நுகர்வோர்கள் மீது பலவீனமான முதலீடு குறை கூறவேண்டாம். மாறாக இது பலவீனமான-வருமானமுள்ள நுகர்வோரை உருவாக்கும் உறுதியான - குறைந்த முதலீட்டின் வேறு வழியாக இருக்கிறது.

அதே நேரத்தில், செபி நன்றாக செயல்படவில்லை. விளம்பரதாரர் செயலில் (நிர்வாகத்தில்) பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எல்லா வகையான வெளிப்பாடுகளையும் பலவிதமான நேர மரியாதைக்குரிய நடைமுறைகளையும் சீர்குலைக்கும் புதிய மற்றும் முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை இறுக்குவதுதுடன் ஒப்பிடும்போது சுயாதீன இயக்குநர்களைப் பற்றிய செபி செயல்பாடானது கனிவானது. உதாரணத்திற்கு 2020 ஆம் ஆண்டில், தந்தை அல்லது பெற்றோர்களின் உடன் பிறந்தவர் நிறுவனத்தின் நிர்வாகமல்லாத தலைவராக இருக்க முடியாது. அதே நேரத்தில் அவர்களுடைய மகன் மற்றும் மருமகன் சி.இ.ஒ அல்லது எம்.டியாக இருக்கலாம். சூழலை நாம் துணிந்து சொல்கிறோம். பலரையும் அது சோர்வடையச் செய்கிறது. உடைக்கப்படாதவைகளை அவசியமில்லாமல் சரியசெய்யப் பார்க்கிறது. மேலும், தீபாவளிக்கு நுகர்வு அதிகரிப்பது அடிப்படை வலியை நீக்கப்போவதில்லை.

நீதிமன்றங்கள் ஒரே நேரத்தில் பாழக்குபவர்களாகவும் இருக்கின்றன. ரியல் எஸ்டேட் துறையைக் கேளுங்கள், பல தசாப்தங்களாக எதிர்க்கப்படாத விதிகளின் மேலே கட்டியவர்கள் சீர்குலைந்து வருகிறார்கள். வாக்குறுதிகளை கடைப்பிடிக்காததற்கு அபராதங்கள் உள்ளன. ரியல் எஸ்டேட் உருவாக்குபவர்கள் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் எளிதான கடன்களால் நிதியளிக்கப்பட்ட அரைகுறையான திட்டங்கள் மூலம் வளரப் பழகுவதும் அவர்கள் புதிய திட்டங்களை அறிவிக்காததும் ஆச்சரியமில்லை. மேலும், அவர்களை திருப்பிச் செலுத்தும்படி கேட்கப்படுவது நிச்சயமாக அவர்களின் இயல்பான உற்சாகத்தைக் குறைக்கும்.

நமக்கு என்ன தேர்வுகள் உள்ளன? அதை தாங்கிக்கொண்டு அதன் அனைத்து இணை பாதிப்புகளுடனும் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும் அல்லது இரட்டை இலக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அப்படியே பார்வையை வைத்திருக்க வேண்டும் அதில் பல நன்மைகள் உள்ளன. சுத்தமாக மாறுவது அவற்றில் ஒன்று இல்லை யென்றாலும், ஏன் கவலைப்படுகிறீர்கள், யார் கவலைப்படுகிறார்கள். மிகவும் கடினமான சூழலில் சிக்கியிருக்கும்போது தேர்வுகள் ஏதும் விவாதிக்கப்படவில்லை. ஏன் விவாதிக்க கூடாது? ஒரு விவாதம் நிர்ணயிக்கப்பட்ட சரி செய்வதற்கான ஆர்வத்தில் ஒரு விவாதம் நடைமுறைக்கேற்ற பரிந்துரைகளை விடுத்து அது ஐந்து ஆண்டுகளில் ஒரு சறுக்கலான பாதையை வரையறுக்கிறது.

இந்த விவாதம் பேரியல் பொருளாதார வல்லுநர்களுக்கும் பங்குச் சந்தை ஆய்வாளர்களுக்கும் மட்டுமானது அல்ல. ஒரு சமூகமாக நாம் விரும்பும் மதிப்புகளைப் பற்றியது (யாருடைய இந்தியா, யாருடைய சமுதாயமும் கவனிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி). கறுப்புப் பணத்தின் மீதான போர் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துயரங்களை அதிகரித்தது. கருப்பு மற்றும் வெள்ளை பொருளாதாரம் எப்போதுமே ஒரு கூர்மையான விளிம்பு பகுதியில் இணைந்திருக்கின்றன. யாரும் அதை மறுக்க மாட்டார்கள். மோசமான பகுதி மெதுவாக வளர்ந்து கொண்டே இருந்தால் (நம்பிக்கையை அழித்துவிடுங்கள், அது வீழ்ச்சியடையவில்லை) அது நல்ல பகுதியையும் கீழே வீழ்த்திவிடும். பல சந்தர்ப்பங்களில் கலப்பு லாப வரம்புகள் முன்பு செய்ததைப் போல கவர்ச்சிகரமானதாகத் தெரியவில்லை. கட்டாயமாக வீழ்ச்சியடைந்து வரும் லாப சூழ்நிலையில் இயல்பூக்கம் புத்துயிர் பெறுவது கடினம். டெங் சியாவோப்பிங்கின் தாக்கத்தை ஏற்படுத்திய கருத்தை நாம் மீண்டும் ஏற்றுக்கொள்கிறோமா, “அது மொத்த உள்நாட்டு உற்பத்தியை இயக்கும் வரையில் அது கருப்பு பணமாக இருந்தாலும் அல்லது வெள்ளை பணமாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் அதை வித்தியாசமாகவும் இழிவானதாகவும் சிந்தித்து இது ஒருபோதும் போகப்போவதில்லை. எனவே அதை பெரிய நன்மைக்காகப் பயன்படுத்துவோம் என்று சொல்ல வேண்டும். அல்லது இந்த தொழில்நுட்ப சகாப்தத்தில் அதன் அளவை குறைக்க நமக்கு உண்மையான வாய்ப்பு உள்ளது” என்று கூறிவிட்டு முன்னேறலாமா?

இரண்டாவது பிரச்னை அரசாங்கத்தின் கொள்கை கணிக்க முடியாதது; என்னுடைய ஒரு வெளிநாட்டு வாரிய சக ஊழியர் ஒரு முறை ஒன்றை அதிர்ச்சியும் மற்றும் பிரமிப்புமான ஒழுங்குமுறை என்று அழைத்தார். மேலும், பலர் அதை வழிகாட்டப்படாத ஏவுகணைகள் என்று அழைத்தனர். இது சரியானதா என்பதைக் கண்டறிவதற்கு முன்பு எதிர்மறையான செயலைச் செய்வது என்று அழைத்தனர்.

வெகுஜன கவனச்சிதறலுக்கான பல ஆயுதங்கள் அனைத்தும் நல்லவை ஆனால் விரிவாக்கத்திற்கு மோசமானவை. வாகனத் தொழில்துறையிடம் கேளுங்கள். மொத்த வருவாய் ரூ.100,000 கோடிக்கு மேல் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் மூன்று தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கண்டேன். புதிய மாசு வெளியேற்ற விதிகளை நிறைவேற்றத் தேவையான திடீர் மாற்றத்தை எதிர்கொள்வது பற்றியும் அதைச் செய்வதில் எல்லோரும் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும் பற்றி பேசினேன். நிதி ஆயோக்கிலிருந்து வெளிவரும் அறிக்கைகள் பின்னர் நிதியமைச்சரால் உலகில் 2வாட்ஸ் மற்றும் 3வாட்ஸ் மின்சாரம் மட்டுமே என்று குறைத்து மதிப்பிடப்பட்டன. ஜி.எஸ்.டி விகிதங்களில் திரும்பதிரும்ப அதன் நகர்வுகள், கடந்த சில ஆண்டுகளில் எஃப்.பி.ஐ வரி, ஏஞ்சல் வரி மற்றும் பல விஷயங்களில் கொள்கை முடக்குதலில் இருந்து கொள்கை மிரட்டல் வரை நம்மை வழிநடத்தியது. இது ஏன் நடக்கிறது என்பதையும், கொள்கை முன்கணிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமைக்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், என்பதை மையமாகக் கொண்ட ஒரு பொது விவாதம் உதவியாக இருக்கும். இவற்றைப் பற்றிய விவாதம் இரட்டை இலக்க வளர்ச்சியை வழங்காது, ஆனால், அவை அந்த திசையில் ஒரு உண்மையான படியாக இருக்கும். பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதால் வணிகங்களின் ஒழுங்குமுறை சிக்கல்கள் முடிந்துவிட்டன என்று சொல்வதை விட அவை நிச்சயமாக சிறந்ததாக இருக்கும்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment