Advertisment

மீட்பர் வருவாரா மீட்க?

இந்திய அரசின் அடித்தளத்தை தாக்கும் விதமாக திட்டமிட்ட மற்றும் உறுதியான முயற்சிகள் நடக்கின்றன. மக்களின் சுதந்திரம் மற்றும் பறிக்க முடியாத உரிமைகளை பறிக்கும் திருட்டுத்தனமான முயற்சிகள் தொடர்கின்றன.

author-image
WebDesk
New Update
roe vs wade, centre, indian govt, india, constitution, liberty, அரசு, குடிமக்கள், சுதந்திரம், ப சிதம்பரம் கட்டுரை, right to life, p chidambaram, chidambaram, India news, Tamil Indian express, Tamil Indian express news, current affairs

ப. சிதம்பரம்

Advertisment

அரசியலமைப்பை விளக்குவதற்கான உரிமை நீதித்துறையால் வலியுறுத்தப்படுகிறது."நீதித்துறை அதிகாரத்தின் ஒரே களஞ்சியம்" என்று சொல்லப் படுகிறது. ஆனால் அது சட்டமன்றத்தால் போட்டியிடப் படும் என்ற வார்த்தையில் தான் வெற்றி அடங்கி உள்ளது.

நான் சுதந்திரமாக பிறந்தேன் என்று நம்புகிறேன். நான் வெஸ்ட்மின்ஸ்டர் போன்ற பிரிட்டிஷ் நாட்டு ஜனநாயகத்தில் பிறப்பதோ அல்லது சோவியத் பாணி அரசில் அல்லது ஒரு முழுமையான சர்வாதிகாரத்தில் அல்லது சத்தமில்லாத, சண்டையிடும் நாட்டில் பிறப்பதோ என் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம்.

நான் சில மறுக்க முடியாத உரிமைகளுடன் பிறந்தேன் என்று நம்புகிறேன். அவற்றில் எனது சுதந்திரமாக நடமாடும் உரிமை, எனது பேச்சு மற்றும் எழுத்துத் திறனை பயன்படுத்துவதற்கான உரிமை, சக மனிதர்களுடன் சங்கம் அமைக்கும் உரிமை, எனக்கும் எனது குடும்பத்திற்கும் வழங்க உழைக்கும் உரிமை போன்றவை அடக்கம்.

'மாநிலம்' என்பது, தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்து கொண்டு, 'மாநிலத்தை' அமைக்க தேர்ந்தெடுக்கும் குடிமக்களின் கூட்டுப் பெயர் என்பதை தவிர வேறில்லை. குடிமக்கள் தங்களுக்கு ஒரு சாசனத்தை வழங்கும்போது, அது மாநிலத்தின் அரசியலமைப்பாக மாறும். அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை தாண்டி எந்த உரிமையையும் அதிகாரத்தையும் கடமையையும் எடுத்துக் கொள்ள அரசு வலியுறுத்த முடியாது. அரசியலமைப்பை ஏற்காத ஒரு குடிமகன் நாட்டை விட்டு வெளியேறி, வேறொரு நாடு அந்த குடிமகனை ஏற்றுக்கொண்டால் அவர் மற்றொரு நாட்டின் குடிமகனாக மாற முடியும்.

சாதாரணமாக, அரசும் குடிமக்களும் இந்த முழுமையான விவேகமான ஏற்பாட்டில் இணைந்திருக்க வேண்டும். ஆனால் கீழ்க்கண்ட விஷயங்களில் சில பிரச்சனைகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டவற்றின் பொருள், சில சமயங்களில், சர்ச்சையின் அளவுகோலாக மாறுகிறது. இதன் புரிதல் தன்மை மாறுபடுவதால் அவற்றை விளக்குவதில் சர்ச்சை ஏற்படுகிறது. ("நீதித்துறை அதிகாரத்தின் ஒரே களஞ்சியம்") ஆனால் அது சட்ட மன்றத்தால் போட்டியிடப்படும் என்ற வார்த்தையில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது. நீதிபதிகளை சுதந்திரமாக நியமிக்கப்படுவதாக சொல்லப் படுகிறது. அதாவது நியமன அடிப்படையில். ஆனால் நியமன அதிகாரம் பொதுவாக அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது.

இதில் எழுதப்பட்ட வார்த்தைக்கும் அதன் பொருளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சந்தர்ப்பங்கள் இருக்கும். சட்டமன்றம் மற்றும் நீதித் துறையில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். இத்தகைய கருத்து வேறுபாடுகளை நடுநிலையோடு தீர்ப்பதில் தான் முதிர்ந்த நாகரீகமான நாடுகளுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இது அவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது.

1973 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இத்தகைய ஒரு சந்தர்ப்பம் எழுந்தது. கருக்கலைப்பு குறித்து ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. Roe vs Wade என்ற வழக்கில் நீதிபதிகள் மக்கள் பக்கம் நின்று பெண்களின் அந்தரங்க உரிமைகளை ஆதரித்து தீர்ப்பு வழங்கினார். அதாவது கருத்தடை செய்து கொள்ளும் உரிமை, கருவுற்ற தாயின் உடல் தொடர்பான விஷயங்கள் அவர்களுடைய அந்தரங்க உரிமை என விளக்கம் அளித்தனர். 1976-ல் இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு தருணம் எழுந்தது. நீதிபதிகள் இன்றைய அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்று, மக்களின் வாழ்வுரிமை உட்பட (ADM ஜபல்பூர் vs எஸ் எஸ் சுக்லா) அனைத்து அடிப்படை உரிமைகளையும் கைவிட்டனர்.

Roe vs Wade வழக்கில் கருவை கலைக்கும் தாயின் உரிமையை கட்டுப்படுத்தும் சட்டத்தை உருவாக்க ஒரு மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது கேள்வி. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் கீழ் தனிப்பட்ட தனியுரிமைக்கான உரிமை உள்ளது என்றும், ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கலாமா வேண்டாமா என்ற முடிவை உள்ளடக்கும் அளவுக்கு உரிமை உள்ளது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், பெண்ணின் உரிமையை மாநிலத்தின் நலனுடன் சமநிலைப்படுத்தி, முதல் மூன்று மாதங்களின் இறுதி வரை, முதல் மூன்று மாதங்களின் முடிவில் இருந்து கருவுக்கு வெளியே கருவின் நம்பகத்தன்மை வரையிலான காலகட்டத்தில் உரிமைகள் வேறுபட்டவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திரு டொனால்ட் டிரம்ப் வந்து அமெரிக்கர்களை வெவ்வேறு பிரச்சனைகளில் பிளவு படுத்தினார். ரோ vs வேட் வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் மறு ஆய்வு செய்யப்பட்டால் மேலும் பிளவுகள் மற்றும் கசப்புணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கில் பெரும்பாலான நீதிமன்றத்தின் தீர்ப்பின் கசிந்த முதல் வரைவு, ரோ vs வேட் ரத்து செய்யப்பட வேண்டும் என்று முன்மொழிந்தது. அந்த உத்தரவில் கசிந்த ஆவணத்தின்படி, Roe vs Wade வழக்கில் எடுக்கப்பட்ட முடிவு "மிகவும் தவறானது" மற்றும் "அதன் காரணம் பலவீனமாக இருந்தது, இந்த முடிவால் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் மோசமானவை என்கிற கருத்து இப்போதுள்ள அமர்வில் பெரும்பாலான நீதிபதிகள் இடையே ஏற்பட்டிருக்கிறது.

ஒரு தேசம் காத்திருக்கிறது

இந்திய உச்ச நீதிமன்றத்தில் சுதந்திரம் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

பணமதிப்பிழப்பு வழக்கு: கோடிக்கணக்கான மக்களுக்கு பல நாட்களாக உணவு மற்றும் மருந்துகள் வழங்காமல், முன்னறிவிப்பின்றி, 86 சதவீத பணத்தை அரசு பணமதிப்பிழப்பு செய்ய முடியுமா? அப்படி செய்வதன் மூலம் உணவு, மருந்துகள் கூட வாங்க முடியாமல் மக்களை தவிக்க விட்டது சரியானது தானா?

தேர்தல் நன்கொடை பத்திர வழக்கு: அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களால் வழங்கப்படும் நன்கொடைகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. இந்த நன்கொடை மூலம் கோடிக்கணக்கில் ஆளுங்கட்சிகளுக்கு பணம் தர அனுமதித்து, அதன் மூலம் சலுகைசார் முதலாளித்துவத்தையும், ஊழலையும் ஊக்குவிப்பது சரியானது தானா?

லாக்டவுன்: மக்களுக்கு முன்னறிவிப்பின்றி முழுப் பூட்டுதலை விதித்து, வீடு, உணவு, தண்ணீர், மருந்து, பணம் மற்றும் பயணச் சாதனங்கள் இல்லாமல் லட்சக்கணக்கானோரை அவர்கள் நிரந்தர வசிப்பிடங்களுக்கு அரசு அனுப்ப முடியுமா? அவர்களை தவிக்க விட்டது சரியானது தானா?

அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்தல்: இந்தியாவுடன் முறையான ஒப்பந்தம் மூலம் இணைந்த காஷ்மீர் மாநிலத்தை மக்கள் அல்லது மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் இரண்டு பகுதிகளாக பிரிப்பதும், மாநிலம் என்ற அந்தஸ்தை உடைப்பதும் சரியானது தானா?

தேசத்துரோகம்: அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அல்லது கேலி செய்யும் எவருக்கும் IPC யின் 124A பிரிவின் கீழ் தேசத் துரோக குற்றச்சாட்டுகளை அரசால் சுமத்த முடியுமா?

என்கவுண்டர்கள் மற்றும் புல்டோசர்கள் மூலம் இடிப்பது : மக்களின் எதிர்ப்பை அல்லது எதிர்ப்புகளை அடக்குவதற்கு, என்கவுண்டர்கள் மற்றும் புல்டோசர்கள் மூலம் இடிப்பு போன்ற முறைகளை அரசு பயன்படுத்த முடியுமா?

இந்திய அரசின் அடித்தளத்தை தாக்கும் விதமாக திட்டமிட்ட மற்றும் உறுதியான முயற்சிகள் நடக்கின்றன. மக்களின் சுதந்திரம் மற்றும் பறிக்க முடியாத உரிமைகளை பறிக்கும் திருட்டுத்தனமான முயற்சிகள் தொடர்கின்றன. 2022 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில், 180 நாடுகளில் இந்தியா 150 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கும் குடிமக்கள் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளனர். மக்களின் தனி உரிமைகள் தங்களுக்கான மீட்பருக்கு காத்திருக்கின்றன.

தமிழில் :த. வளவன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment