Advertisment

படிப்பினைக் கற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்!

Criticism of the Economic Policy: தடையற்ற வெளிநாட்டு மூலதனம் தொடர்பாக மத்தியில் உள்ளவர்கள் பல்வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். அத்தகைய நாடுகள் தங்கள் தேசிய நலன்களையும் அரசியல் சுயாட்சியையும் வெளிநாட்டு மூலதனத்தின் பலிபீடத்தில் அடமானம் வைக்க வேண்டியிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nirmala Sitharaman's Budget 2019-20, Union Budget 2019-20, Economic Policy of The Government of India, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரக் கொள்கை மீது விமர்சனம், பினாய் விஸ்வம் எம்.பி, Binoy Viswam MP, Communist Party of India, Criticism On Economic Policy of Centre

Nirmala Sitharaman's Budget 2019-20, Union Budget 2019-20, Economic Policy of The Government of India, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரக் கொள்கை மீது விமர்சனம், பினாய் விஸ்வம் எம்.பி, Binoy Viswam MP, Communist Party of India, Criticism On Economic Policy of Centre

பினாய் விஸ்வம், எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Advertisment

Criticism of the Economic Policy of the Government of India: 2019-20 வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தின் பிரச்னையில்லாத படத்தை வரைவதற்கு ஆர்வமாக இருந்தார். ஆனால், விரைவாக அது வலிமை இல்லாத வெற்று என்று நிரூபித்துவிட்டது. ஏற்கனவே, வலுவாக இருந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான புதிய சோதனைகளை அரசாங்கம் வெறித்தனமாக கொண்டு வரத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே இது ஒரு விஷயமாக மட்டும் இருந்தது. சமீபத்திய அறிவிப்பு 10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்கு நிறுவனங்களாக உருவாக்குகிறது.

பெரிய வங்கிகள் இப்போது கடன் திறனை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது ஒரு அளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே பொருளாதாரத்தை காப்பாற்றாது. வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை கடன்களை மீட்பதற்கான திறனுடன் தொடர்புடையது. கடந்த நிதியாண்டில் ரூ.1,23,156 கோடியை மீட்டுள்ளதாக அரசாங்கம் பெருமை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மீட்பு வீதத்தை மோசமான கடன்கள் - 2019 மார்ச் மாதத்தில் ரூ .8,06,412 கோடி அளவோடு ஒப்பிட வேண்டும்.

பெருமளவிலான பணம் செலுத்தப்பட்டுவிட்டதாக நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக மௌனமாக இருந்தார். கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 84 சதவீதம் அதிகரித்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி நிர்வாகிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையேயான தொடர்பு மோசமான கடன்களில் பெரும் பங்கு காரணமாக உள்ளது. பெரிய வங்கிகளாக மாறுவது பெரிய மோசடி ஆபத்து ஆகும். இணைப்புகளில் ஆபத்து மட்டுமே அதிகரிக்கிறது. இந்த இணைப்புகளின் அனுபவம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குழுவில் நடந்ததைப் போல, பயனற்ற தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இணைப்பு அறிவிப்பு வெளியான அதே நாளில், 2019 - 20 முதல் காலாண்டில், கடந்த ஆறு ஆண்டுகளில் 5 சதவீதம் என மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த வளர்ச்சியை அரசாங்கம் அறிவித்தது முரணாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில், ரூ.1.76 லட்சம் கோடியை அளிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது. ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதன கட்டமைப்பை மறுஆய்வு செய்வதற்கான குழுவில் உள்ள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருந்து ரூ.54,255 கோடிக்கு மேல் கோரியதாக கூறப்படுகிறது. அதை குழு நிராகரித்தது. நிதித்துறை செயலாளராக இருக்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர், ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை 3 சதவீதமாக குறைக்கப்படுவது நிதி ஸ்திர்த் தன்மைக்கு ஆபத்தான செயல் என்றும் நிபுணர்களின் கூற்றுப்படி பாதுகாப்பான வரம்பு 4.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்று உறுப்பினர்களை இணங்க வைக்க முயற்சி செய்துள்ளார்.

இது ரிசர்வ் வங்கியின் நிலைத்தன்மை குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளாத அளவுக்கு அரசாங்கம் மிகவும் வெறித்தனமாக இருப்பதை காட்டுகிறது. அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான இதுபோன்ற கொள்கை மோதல்களே முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் மற்றும் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா ஆகியோர் ராஜினாமா செய்ய வழிவகுத்தன. மோடி அரசாங்கம் வங்கியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு கவனம் செலுத்தும் மனநிலையில் இல்லை. அதன்படி, ஒரு வங்கியின் ஸ்திரத்தன்மை என்பது அதன் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் முதன்மை கவலையாக இருக்கிறது.

வலுவான மற்றும் துடிப்பான பொருளாதாரம் குறித்த அரசாங்கத்தின் கூற்றுகள் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, நிதி அமைச்சர் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்ட புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

அது அவர் ஒரு புதிய பட்ஜெட்டை முன்வைப்பது போல இருந்தது. அறிவிப்புகளின் உந்துதல் நிச்சயமாக வணிகம் செய்வதை எளிதாக்குவதாக இருந்தது. அனைத்து முக்கியமான துறைகளிலும், முதலாளித்துவ பேராசையின் நலன்களுக்கு ஏற்ப விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தளர்த்தப்பட்டன.

அது தனியார் முதலீடுகள் மட்டுமே நாட்டுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்பதை நியாயப்படுத்துவதாக இருந்தது. முதலீட்டால் இயக்கப்படும் பொருளாதாரத்தைப் பற்றி அவர்கள் பேசும்போது, மீண்டும் அவர்களின் கவனம் அந்நிய நேரடி முதலீடாக இருந்தது. அனைத்து விதிமுறை தளர்வுகளும் சலுகைகளும், சிவப்பு கம்பளங்களும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. தடையற்ற வெளிநாட்டு மூலதனம் தொடர்பாக அவர்கள் பல்வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். அத்தகைய நாடுகள் தங்கள் தேசிய நலன்களையும் அரசியல் சுயாட்சியையும் வெளிநாட்டு மூலதனத்தின் பலிபீடத்தில் அடமானம் வைக்க வேண்டியிருந்தது.

ஜூலை 28 அன்று, நிலக்கரிச் சுரங்கம் மற்றும் ஒப்பந்த உற்பத்தியில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டையும், டிஜிட்டல் ஊடகங்களில் 26 சதவீதத்தையும் அனுமதிக்கும் புதிய தளர்வுகளை அமைச்சரவை அறிமுகப்படுத்தியது. அளவற்ற லாபத்தின் பரந்த உலகம், உலக பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது. வெளிநாட்டு மூலதனம் லாபத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்திய சந்தையில் நுழைய ஆர்வமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர்கள் இதைவிட ஒரு சிறந்த களத்தைக் காணும்போது அந்த மூலதனம் போய்விடும். வெளிநாட்டு மூலதனம் மீது நிபந்தனையற்ற சார்புநிலையின் தாக்கம் பொருளாதாரத்தின் பேரழிவாக இருக்கும். நாம் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியின் காலத்தில் இல்லை. அரசாங்கம் நெருக்கடி கவலையின் அளவை மறைக்க விரும்புகிறது.

India Nirmala Sitharaman Union Budget Rbi Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment