Advertisment

அம்பேத்கரின் கொள்கைகள் இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்ள உதவும்

டிசம்பர் 6, 1956-இல் பி.ஆர்.அம்பேத்கர் புகழுடல் எய்தினார். அப்போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, “பி.ஆர்.அம்பேத்கரை சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக நாம் நினைவுகூர வேண்டும். இந்திய அரசியலமைப்பை வடிவமைப்பதில் அவர் பெரும் பணியாற்றினார்.” என்று கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
br ambdekar, babasaheb dr br ambedkar, ambedkar death anniversary, அம்பேத்கர் நினைவு தினம், டி.ராஜா, jawaharlal nehru, indian constitution, express opinion

br ambdekar, babasaheb dr br ambedkar, ambedkar death anniversary, அம்பேத்கர் நினைவு தினம், டி.ராஜா, jawaharlal nehru, indian constitution, express opinion

டி.ராஜா, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Advertisment

டிசம்பர் 6, 1956-இல் பி.ஆர்.அம்பேத்கர் புகழுடல் எய்தினார். அப்போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, “பி.ஆர்.அம்பேத்கரை சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக நாம் நினைவுகூர வேண்டும். இந்திய அரசியலமைப்பை வடிவமைப்பதில் அவர் பெரும் பணியாற்றினார்.” என்று கூறினார்.

டிசம்பர் 6, 1992 அன்று, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு நடவடிக்கை நமது தேசிய விடுதலை இயக்கம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக தோளோடு தோள் சேர்ந்து போராடினார்கள். அந்த நாட்களில் அவநம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் விதைகள் விதைக்கப்பட்டன. அந்த கொடூரமான நிகழ்வுக்குப் பிறகும், இந்தியாவும், அதன் தலைவர்களும், அதன் அரசியலமைப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக பொது மக்களும் சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை சமூகத்தின் பிணைப்புகளாகத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த இடிப்பு முஸ்லிம்களை அந்நிய எதிரி என்று சித்தரிப்பது மற்றொரு மோசமான முயற்சி ஆகும். இந்தியாவை ஒரு இந்து மதம் சார்ந்த நாடாக மாற்றுவதற்கான எம்.எஸ்.கோல்வால்கர், கே.பி.ஹெட்கேவர் ஆகியோரின் சட்டத்தை நிறைவேற்றியது. டிசம்பர் 6 ஆம் தேதி ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க கட்டமைப்பை மட்டுமல்ல வரலாறே சிதைக்கப்பட்டது. இந்த காயங்கள் இந்த நாட்டின் ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டு மனசாட்சியில் இன்னும் அப்படியே பச்சையாக இருக்கிறது. இது நீதி மற்றும் சமத்துவத்திற்காக போராடிய அம்பேத்கர், பெரியார், பூலே மற்றும் பிர்சா முண்டா ஆகியோரின் பாரம்பரியத்தை அழிப்பதற்கான முயற்சி ஆகும்.

ஆரம்பத்தில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவ சக்திகள் சமுதாயத்தின் படிநிலை பிரிவுக்கு மதம், சாதி அடிப்படையில் ஒரு உறுதிப்பாட்டைக் காத்து வருகின்றன. அது மனுவின் தூய்மை மற்றும் தீட்டு உணர்வால் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மசூதியை இடிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாள் சாதி அமைப்பு மற்றும் சாதி படிநிலைக்கு எதிராக போராடிய மிக உயர்ந்த ஒருவருடன் தொடர்புடையது என்பது தற்செயலானது அல்ல. டிசம்பர் 6 பாபாசாகேப் பீமராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வானம் அடைந்த நாள். இந்த நாட்டின் ஒடுக்கப்பட்டவர்கள் பாபாசாகேப்பின் மாணவர்கள் நீதியையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த அணிவகுத்து வருகையில், இந்துத்துவ சக்திகள் நாட்டை சமூக விலக்குதலுக்கும் சமூக படிநிலைக்கும் கொண்டு செல்கின்றன. குறியீட்டு அளவில், கர சேவகர்களின் வன்முறை மற்றும் மீறலைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 6 -ஐ “ஷௌரிய திவஸ்’ என்று நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் வலதுசாரி சக்திகள் அம்பேத்கரின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சிக்கின்றனர்.

அம்பேத்கர் ஆதரித்த நவீன, மதச்சார்பற்ற கருத்துக்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் நிற்கின்றன. இந்து மதத்தின் காட்டுமிராண்டித்தனத்தை அனுபவித்த அம்பேத்கர், அவர் ஒரு இந்துவாகப் பிறந்திருந்தாலும் அவர் ஒருபோதும் இந்துவாக இறக்க மாட்டேன் என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். பார்ப்பனிய வன்முறைக்கு எதிரான இறுதி கிளர்ச்சியாக, அம்பேத்கர் இந்து மதத்தை நிராகரித்து பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை, மதத்தின் செயல்பாடு ஒரு தனிநபரின் தார்மீக மேம்பாடாகும். சங் பரிவாரங்களைப் பொறுத்தவரை, அது எப்போதும் மற்றவருக்கு எதிராக அரசியல் அணிதிரட்டலாகவே இருந்து வருகிறது.

டிசம்பர் 6 தினத்தை அனுசரிக்கும்போது, அம்பேத்கரின் பார்வையை நினைவில் கொள்வது இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

அயோத்தி தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் ஆழ்ந்த சிக்கலான முடிவு இந்துத்துவ சக்திகளை தைரியப்படுத்தியுள்ளது. அம்பேத்கரை அவர்களில் ஒருவராக்குவதில் மறுபரிசீலனை செய்ய ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பிரிவுகளுக்கு விருப்பம் இருந்தபோதிலும், வலதுசாரி சக்திகளுக்கு இருக்கும் ஒரே ஆர்வம் சமூகத்தை துருவப்படுத்துவதும் அரசியல்-தேர்தல் ஆதாயங்களை ஈர்ப்பதும் மட்டுமே என்பது தெளிவாகிறது. தன்வயமாக்குதல் என்பது அவர்களின் ஒரு யுக்தி முறையாகும். ஆனால், அவர்கள் பாபாசாகேப்பின் சிலைகளுக்கு வெறுமனே மாலை அணிவிப்பதால் யாரும் முட்டாளாவதில்லை. ஒவ்வொரு முறையும் அம்பேத்கரைப் பற்றிய பகுதிகள் பள்ளி பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும் போது, பிராமனிய சக்திகளின் உண்மையான முகம் வெளிப்படுகிறது.

இந்தியாவில் அம்பேத்கரின் அதிகரித்துவரும் பொருத்தப்பாடு, படிநிலை இல்லாத, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் சமுதாயத்தைப் பற்றி கனவு காணும் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கிறது. படிநிலை மற்றும் அவமானங்களைச் செய்ய முற்படும் பிற்போக்குத்தனமான மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு அவரது பாரம்பரியமும் பொருத்தப்பாடும் என்றைக்கும் அழியாத ஒரு சவாலாகும். சாதி, ஆணாதிக்கம், மத பெரும்பான்மை ஆகியவற்றின் அதிகார கட்டமைப்புகளை நாம் அங்கீகரித்து, அம்பேத்கரின் பாரம்பரியத்தை சிதைப்பதற்கான அவர்களின் முயற்சிகளைத் தடுக்க வேண்டிய நேரம் இது.

பாபர் மசூதி இடிப்பு இந்தியாவின் சமூக மற்றும் அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு கடுமையான கறையாகும். அந்தச் செயலின் வெற்றியாளர்கள் இப்போது தலைமையில் உள்ளனர். அம்பேத்கர் ஆதரவாக நின்ற அனைத்தையும் அச்சுறுத்துகிறார்கள். ஒரு மதச்சார்பற்ற குடியரசின் குடிமக்கள் என்ற வகையில், டிசம்பர் 6 இன் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்வதும், அனைவருக்கும் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் உறுதிசெய்யும் கூட்டுப் போராட்டத்திற்கான நம்பிக்கையையும் ஈர்ப்பது கட்டாயமாகும்.

Babasaheb Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment