Advertisment

இந்தியா தேசிய மொழி இல்லாத நாடு என்பதை ஏற்றுக்கொள்வோம்

ரீட்டா கோத்தாரி: இந்தியாவானது ஒரு தேசிய மொழி இல்லாத ஒரு தேசமாக ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது தேசிய மொழி இல்லாதது அல்லது இல்லாத நிலை அல்ல, மாறாக வேறுபட்ட மாதிரியைக் கொண்டுள்ளது. உலகின் பிற பகுதிகள் இந்த மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; ஒரே மொழி-ஒரே தேசம் என்ற மாதிரியை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா தேசிய மொழி இல்லாத நாடு என்பதை ஏற்றுக்கொள்வோம்

இந்தியாவில் சில வருடங்களுக்கு ஒருமுறை, அடிக்கடி இந்தியின் மாயத்தோற்றம் வெளிப்படுகிறது. அதற்கான எதிர்வினைகள்  அதன் நிலை மற்றும் இந்தியின் ஒரு குறிப்பிட்ட பதிப்பு  ஆகியவற்றில் இந்தியை விட அதன் நிலையை பற்றியதாக இருக்கிறது (படம்: சி ஆர் சசிகுமார்)

Advertisment

இந்தி மொழி குழப்பம் மீண்டும் வந்துவிட்டது. இதற்கு முன் ஒருமுறை அல்ல பலமுறை குழப்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். 2014 இல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அதிகாரபூர்வ கடிதப் பரிமாற்றங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று அதன் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டளையை இப்போது நாம் மறந்து விட்டோம். . சுதேசி மற்றும் ஒரு பூர்வீக தேசிய மொழியைக் கொண்டிருப்பதற்காக அடிக்கடி மேற்கொள்ளப்படும் இந்த நகர்வு, தேசிய மொழியின்றி தேசங்களைக் கற்பனை செய்ய முடியாத ஒரு விதேஷி (வெளிநாட்டு) யோசனையின் அடிப்படையில் அமைந்தது.

இந்தியாவில் சில வருடங்களுக்கு ஒருமுறை, அடிக்கடி இந்தியின் மாயத்தோற்றம் வெளிப்படுகிறது. அதற்கான எதிர்வினைகள்  அதன் நிலை மற்றும் இந்தியின் ஒரு குறிப்பிட்ட பதிப்பு  ஆகியவற்றில் இந்தியை விட அதன் நிலையை பற்றியதாக இருக்கிறது. குறிப்பாக உள்ளார்ந்த ஏகாதிபத்தியம் அல்லாமல்  தேவைக்காக உருவாக்கப்படும் போது பேச்சு வழக்கிலான இந்திக்கு மிகக் குறைவான எதிர்ப்பு உள்ளது, இந்திய மக்கள் தங்கள் சொந்த மொழி வளங்களை விட்டுவிட்டு, மொழிவாரியான பிளவுகளுக்கு இடையே தொடர்பு கொள்ள முடிகிறது. முற்றுகையிடப்படும் போதுதான் அவர்கள் தங்கள் மொழிகளின் மேன்மையை ஆவேசமாகப் பறைசாற்றுகிறார்கள்.

இதற்கிடையில், இத்தனை ஆண்டுகளாக இந்தி எங்கே இருந்தது? இந்தியை தேசிய மொழியாக்கும் ஒரு கைவிடப்பட்ட முயற்சிக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ மொழி என்ற அளவில் முடங்கியது. அரசு நிறுவனங்கள் இந்தியை வெறுமனே சம்பிரதாயத்துக்காகப் பயன்படுத்துவது தொடங்கிறது.  மொழியில் தங்களது திறமையை உறுதிப்படுத்தும் அல்லது மறுக்கும் படிவங்களை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நிரப்ப வேண்டும். இந்தப் படிவத்தை நிரப்புவதற்குக் கூட அலுவல் பூர்வ (அதிகாரப்பூர்வ/அலுவல் பூர்வமான) இந்தியில் தேர்ச்சி தேவை என்பது வேறு விஷயம். இந்தி மொழிபெயர்ப்பில் செயல் திறனற்ற துறைகள் இந்தி இதுவரை அறியாத வார்த்தைகளை தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றன. இந்த முறை இதில் வித்தியாசம் என்னவென்றால், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பாக இதற்கு முன்னர் பாஜகவின் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதியாக இருந்த வடகிழக்கு மாநிலங்களை பற்றிக் குறிப்பிடுகிறார் - மாண்புமிகு அமைச்சரின் அறிக்கை "நியாயமான" குரலில் இந்தி பாராளுமன்றத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழி என்பதாக இயல்பானதாக இருக்கிறது.  அல்லது நாட்டின் ஒற்றுமை மற்றும் நாட்டில் உள்ள தொடர்பு ஆகியவை ஒரே மாதிரியான இரண்டு விஷயங்களாகும்.  சில நேரங்களில் ஒன்று மற்றும் சில நேரங்களில் மற்றொன்று என ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டும் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்படுகின்றன.  உத்தியோகபூர்வ மொழி அல்லது தேசிய மொழி அறிவு இல்லாததால் இந்தியாவில் வாழ்க்கை ஒன்றும் முடங்கி விடாது.  அல்லது அது மொழியைப் பற்றியது அல்ல, ஆனால் அது பிரதிபலிக்கும் சக்தியைப் பற்றியது என்பதை சில நாட்களில் நாம் அறிவோம், சில நாட்களில் மொழி, வழக்கம் போல் வணிகமாகிறது. மொழி, இந்த விஷயத்தில், போட்டியிடும் கூட்டாட்சி மற்றும் மையவாத சக்திகளின் அடையாளமாகவும் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இந்தியைக் கட்டாயமாக்கும் உள்துறை அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பு மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்ட சில தரப்பினரின் எதிர்மறை கருத்துகள் ஆகியவற்றைப் பற்றி நினைக்கும் போது, ​​எனக்கு 1949 ஆம் ஆண்டு நினைவுக்கு வந்தது. மொழி என்பது ஒரு உதவி மற்றும் ஒரு குறிக்கோள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.அதேபோல மொழி பற்றிய அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் மிக நீண்டதாகவும், அதிக உணர்ச்சிபூர்வமான வாதங்களைக் கொண்டதாகவும் மாறியது. அவர்கள் மொழியுடன் அதன் மீதான  ஆழமான உணர்வுகளுக்கு துரோகம் செய்கிறார்கள், ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியாக நாம் குறிப்பிடும் இந்தியின் உறுதியற்ற தன்மையையும் காட்சிக்கு வைக்கிறார்கள். பிரஜ், உருது மற்றும் பஞ்சாபி மொழிகளில் இருப்பதாக நாம் கருதும் எழுத்தாளர்களின் வசனங்கள் இந்திக்கான காரணத்தை வலியுறுத்த மேற்கோள் காட்டப்படுகின்றன, அதே சமயம் இந்த சட்டமானது ஒப்பந்தமா அல்லது சட்டமா என்ற கேள்விகள் இந்தி எவ்வளவு கடினமான கருத்து என்பதைக் காட்டுவதற்காக கேட்கப்படுகின்றன. 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் தலைவராகத் தலைமை வகித்த அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், “எது சொல்லப்படுகிறதோ அதை மிதமான மொழியில் சொல்ல வேண்டும், காரணத்திற்காக முறையிடுவதாகவும் இருக்கலாம். மேலும் இது போன்ற ஒரு விஷயத்தில் உணர்வு அல்லது பேரார்வத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது" என்று சொன்னார்.

மொழியைப் பற்றி பேசுவதற்கு மிகவும் பொருத்தமான மொழி எது என்று ஒருவர் கேட்கலாம்? டாக்டர் பிரசாத் இதைச் சொல்லும் போது உணர்ச்சியின் எழுச்சியை எதிர்பார்த்தாரா? மொழி பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும் விதிமுறைகள், மொழியின் திறனை ஒரு ஆயுதமாக எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பது சுவாரஸ்யமானது. ஒருவேளை, இப்போதைக்கு, "பொருத்தம்" என்ற சொற்றொடரை மறந்துவிட்டு, ஒரு எளிய கேள்வியைக் கேட்கலாம்: உள்துறை அமைச்சரின் அறிவிப்பை ஒரு மொழியில் விவாதிக்க முடியுமா? இல்லை, நம்மால் முடியாது. உணர்ச்சிவசப்படாமல் விவாதிக்க முடியுமா? அதற்கும் நம்மிடம் பதில் இல்லை.

வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு மாற்றங்களுடன் இது ஒரு திணிப்பு என்று நம்மால் எடுத்து சொல்ல முடியவில்லை என்று அர்த்தமா? இதில்  சுவாரசியமான விஷயம் என்னவென்றால்  சில நாட்களில் மொழி எப்படி தற்செயலானதாகவும் முக்கியமற்றதாகவும் தோன்றுகிறது   மற்றும் மற்றவர்களின் வாழ்க்கை மற்றும் இறப்பு சூழ்நிலையின் தீவிரத்தை பெறுகிறது. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தீக்குளிப்பு என்பது மொழிப் பிரச்சினையின் காரணமாகத்தான் நேரிட்டது. உள்துறை அமைச்சரும், அவரது முன்னோடிகளில் பலரைப் போலவே, மொழி என்பது வெறுமனே தகவல் தொடர்புக்கானது மட்டும் அல்ல என்ற உண்மையைப் புறக்கணிக்கிறார்.

அவரது பார்வையில், அவருக்கு மிகவும் நெகிழ்வான அணுகுமுறையை அவர் முன்வைத்துள்ளார், அதாவது இந்தி "உள்ளூர்" மொழிகளில் இருந்து வார்த்தைகளை எடுக்க வேண்டும், அதனால் அது "தாய்மொழிகளுக்கு" எதிராக அமைக்கப்படவில்லை என்பதை கூறூகிறார்.. இதுவும் இனம் புரியாத பயத்தைப் பரப்பும் நடவடிக்கை  மற்றும் அசாதரணமான அலுவல் பூர்வ இந்தி, மொழிக்கு ஒரு வரலாற்று அவமானம் செய்தது.

இருப்பினும், வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட தாய்மொழிகள் பேச்சுவழக்குகளாக மாறுகின்றன, அதே சமயம் கூட்டங்களுக்கும்  பாராளுமன்றங்களுக்கும் இது முன்னெடுக்கப்படுவதற்குமான சக்திவாய்ந்த எதிர்காலம் உள்ளது. இந்தி அதிகாரத்தின் மொழியாக ஷாவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது, மேலும் இது காரோ அல்லது காசியில் இருந்து சில வார்த்தைகளை எடுத்துக்கொள்வதால் அது திணிக்கப்பட்ட மொழி என்பது  மாற்றப் போவதில்லை. இந்திக்கு எதிரான போட்டி என்பது மற்ற இந்திய மொழிகளுடன் அல்ல, ஆங்கிலத்துடன் தான் என்று அறிவிக்கும் கோஷங்கள் காலியாக உள்ளன, ஏனென்றால் பாராளுமன்றத்தில் உள்ள ஆவணங்களில் 70 சதவிகிதம் (ஷாவின் சொந்த ஒப்புதலின்படி) இந்தியில் உள்ளது என்பதை நாம் அறிவோம்.

இறுதியாக, இந்தி எனக்கு மிகவும் பிடித்த மொழிகளில் ஒன்று என்பதை தெளிவுபடுத்துவது (ஏனெனில் அதுபோன்ற காலங்களில் நாம் வாழ்கின்றோம் என்பதால்) முக்கியமானது. பெரும்பாலான சிந்திகள் தங்கள் சொந்த மொழியை கடினமாகவோ அல்லது மோசமானதாகவோ அறிந்ததால், இந்தியாவில் சரளமாக இந்தி பேசி வளர்ந்துள்ளனர், இந்தி என்பது ஒரு மொழி   என்பதை பற்றிய விஷயம் அல்ல. ஆனால் இந்தி, அதன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிவேடு ஆகியவை  இன்று தேசத்தையும் அதன் விதிமுறைகளையும் யார் வரையறுக்க வேண்டும் என்பதற்கான அடையாளங்களாக உள்ளன.  இந்தியாவானது ஒரு தேசிய மொழி இல்லாத ஒரு தேசமாக ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது தேசிய மொழி இல்லாதது அல்லது இல்லாத நிலை அல்ல, மாறாக வேறுபட்ட மாதிரியைக் கொண்டுள்ளது. உலகின் பிற பகுதிகள் இந்த மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரே மொழி-ஒரே தேசம் என்ற மாதிரியை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

இந்தக் கட்டுரை முதன்முதலில் ஏப்ரல் 14 அன்று அச்சுப் பதிப்பில் ‘Speaking for ourselves’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் அசோகா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக உள்ளார்.

தமிழில்; ரமணி

India Amit Shah Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment