Advertisment

ஜெய் பீம் படத்தில் அம்பேத்கர் பற்றிய தேடுதல்

Looking for Ambedkar in ‘Jai Bhim’: ஜெய் பீம் திரைப்படம் நிறுவனமயமாக்கப்பட்ட பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் நீதி மற்றும் அதிகாரத்திற்கான தேடலின் முக்கியமான சித்தரிப்பு என எழுத்தாளர் சூர்யகாந்த் வாக்மோர் குறிப்பிடுகிறார்.

author-image
WebDesk
New Update
ஜெய் பீம் படத்தில் அம்பேத்கர் பற்றிய தேடுதல்

விளிம்புநிலை மக்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் பிரதான இந்திய சினிமாவில் அரிதாகவே காணப்படுகின்றன. டி.ஜே.ஞானவேலின் ஜெய் பீம் அவற்றில் ஒன்று, அடையாளம் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட பாகுபாடு தொடர்பான பிரச்சனைகளை படம் நேர்மையுடன் வெளிப்படுத்துகிறது. பொய்யான திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போன தன் கணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பார்வதி (படத்தில் செங்கேணி) என்ற இருளர் பெண்ணின் போராட்டத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

Advertisment

ஜெய் பீம் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார், இது கம்யூனிஸ்ட் வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக மாறிய, கே.சந்துரு அவர்களின் கதாபாத்திரம், செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் மற்றும் அவரது கணவர் ராஜாக்கண்ணுவாக மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். படம், இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை, தொழில் மற்றும் கலாச்சாரம், சிறந்த வாழ்க்கை மற்றும் கல்விக்கான அவர்களின் தேடல் மற்றும் தினசரி வாழ்க்கைப்பாடுகள், சித்திரவதைகள் மற்றும் வெகுஜன சிறைவாசம் ஆகியவற்றைச் சித்தரிக்கிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஆழமான படிநிலை மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்டமைப்பில் உள்ளடங்கியுள்ளன.

1990 களின் முற்பகுதியில் நடக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், ராஜாக்கண்ணு அவரைப் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளும் உயர் சாதி நிலப்பிரபுக்களின் வீடுகளிலும் பண்ணைகளிலும் பாம்பு பிடிப்பவராக வேலை செய்வதைக் காட்டுகிறது. ஆயினும்கூட, இருளர்களின் வீடற்ற, நிலமற்ற குடியுரிமை நம்பிக்கையற்றது அல்ல, அவர்கள் இயற்கையின் அருகாமையில் இருந்தும் அரசியலமைப்பில் பொதிந்துள்ள பாதுகாப்புகளிலிருந்தும் அர்த்தத்தைப் பெறுகின்றனர்.

நீதியரசர் சந்துரு நிஜ வாழ்க்கையில் தனது கம்யூனிஸ்ட் சார்பு பற்றி வெளிப்படையாக இருந்துள்ளார், இதை ஞானவேல் திரைப்படத்தில் நன்றாகக் காட்டியுள்ளார். பல்வேறு காட்சிகளின் பின்னணியில் கார்ல் மார்க்ஸின் உருவங்கள் மற்றும் சிலைகளுடன் சுத்தியல் மற்றும் அரிவாள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் சிவப்புக் கொடியின் அடையாளங்கள் காணப்படுகின்றன. நீதிபதி சந்துரு, உயர் நீதிமன்றத்தில் செங்கேணி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு மீது வாதாடுவதற்காக, ராஜாக்கண்ணுவின் லாக்கப் மரணம் மற்றும் திருட்டுக்காக அவர் தவறாக கைது செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை சேகரிக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாக்கண்ணு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் கொடுமைகளின் சித்தரிப்பு நெஞ்சை பிசைவதாக உள்ளது. அதேநேரம் அதிர்ச்சியின் மத்தியிலும் கர்ப்பிணி செங்கேணியின் நீதிக்கான தேடுதல் ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த வழக்கை வாதிடும் வக்கீல் சந்துரு மற்றும் அரசின் வலிமைமிக்க எந்திரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு நல்ல காவலர் (பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்), இருவரும் மனசாட்சிக்கான போரில் கலந்துகொள்வது போல் கதை விரிவடைகிறது.

ஜெய் பீம் படம் இந்திய அரசின் ஆணாதிக்க தன்மை பற்றியும், அதன் தளர்வான கட்டமைப்புகள் ஜாதி மற்றும் உறவினர் அதிகாரங்களால் ஊடுருவி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களான பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பாகுபாட்டை செயல்படுத்துவதற்கும் நிறுவனமயமாக்குவதற்கும் எப்படி உதவுகிறது என்பது பற்றியும் விளக்குகிறது.

திரைப்படத்தில் எதார்த்தம் பொதிந்துள்ள போதிலும், சில கேள்விகள் உள்ளன. சூர்யா நீதியரசர் சந்துரு போல இருக்கிறாரா? தமிழ்த் திரைப்படங்கள் கருமையான சருமம் மற்றும் எதார்த்த சினிமாக்களுக்கு மதிப்பளிப்பதை நிச்சயமாக இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். மற்றொரு கவலை இடதுசாரி அரசியலின் சித்தரிப்பு ஆகும். தமிழ்நாட்டின் சமூகவியலாளரும் அறிஞருமான ஹ்யூகோ கோரிங்க், அரசியலும் நடைமுறைவாதத்தின் ஒரு விளையாட்டு என்றும் இடதுசாரி இயக்கங்களும் நடைமுறை அரசியலைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றும் கூறுகிறார். இந்த நடைமுறைவாதம்தான் தமிழ்நாட்டில் சாதி மற்றும் சமூகப் புறக்கணிப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்த இடதுசாரிகளை கட்டாயப்படுத்தியது. காந்தி மற்றும் நேருவால் அம்பேத்கர் ஓரங்கட்டப்பட்டார் என்று சந்துரு குறிப்பிடும் ஒரு தடவையைத் தவிர ​​அம்பேத்கரை வழிகாட்டும் ஒளியாகவோ அல்லது தூண்டுதலாகவோ படத்தில் சித்தரிக்கப்படாதபோது, ஜெய் பீம் என்று தலைப்பு வைக்கப்பட்டது ஏன், என ஆச்சரியமாக இருக்கிறது.

அம்பேத்கர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அரசியலின் தற்போதைய அழுத்தங்களுக்கும் அதன் விளைவாக வரும் நடைமுறைவாதத்திற்கும் அம்பேத்கரின் அடையாளப் பிரசன்னம் தேவைப்படலாம். சட்ட செயல்பாடு மற்றும் சமூக நீதியை நோக்கிய ஒரு சட்ட நாடகத்தில், சிவில் சமூகத்தைப் சரிசெய்யும் செயல்முறைக்கு சமூகத்திலும் நீதிக்கான நிறுவன வழிமுறைகளிலும் சிறிய மற்றும் தொடர்ச்சியான புரட்சிகள் தேவை என்று அம்பேத்கர் நம்பியதால், அம்பேத்கர் மார்க்ஸை விட ஊக்கமளிப்பவராக இருக்க முடியும். நீதி மற்றும் அதிகாரத்திற்கான தேடுதல் என்பது பின் தங்கிய பிரிவினருக்கு ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். ஜெய் பீமில் ஒரு பாடலின் வரிகள் பின்வருமாறு:

அதிகாரத்தை கையில் எடு/ அதிகாரத்தை கையில் எடுக்க தைரியம் வேண்டும்/ அதை தவிர உனக்கு வேறு வழியில்லை.

இருளர்கள் இன்னும் கணிசமான அதிகாரத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் அம்பேத்கர் இன்னும் அந்த தருணத்தை கைப்பற்றவில்லை என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். சிறந்த உலகத்திற்கான நமது போராட்டத்தில் ஜெய் பீம் போன்ற பல திரைப்படங்கள் நமக்குத் தேவை.

இந்த கட்டுரை முதன்முதலில் நவம்பர் 11, 2021 அன்று அச்சுப் பதிப்பில் ‘நம் அம்பேத்கரை தேடி’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் சூர்யகாந்த் வாக்மோர் ஐஐடி பாம்பேயில் சமூகவியல் பேராசிரியராக உள்ளார்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment