Advertisment

காந்தி மற்றும் பகத் சிங்கை இன்றைய அரசாங்கம் என்ன செய்திருக்கும்?

What would today’s government have done with Gandhi and Bhagat Singh? : காந்தி மற்றும் பகத் சிங், இருவரும் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும், கருத்து வேறுபாடு மற்றும் சுதந்திர சிந்தனைக்கான கலாச்சாரத்தை நிலைநாட்டினர் - டி.ராஜா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காந்தி மற்றும் பகத் சிங்கை இன்றைய அரசாங்கம் என்ன செய்திருக்கும்?

கட்டுரையாளர் : டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

Advertisment

அக்டோபர் 2 ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 28 அன்று பகத்சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சுதந்திர போராட்டத்தின் மதிப்புகளை நினைவுகூரும், இதனை ஒவ்வொரு இந்தியரும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும். காந்தி மற்றும் பகத் சிங் ஆகிய இருவரும் சுதந்திரத்தை பாதுகாக்கும் ஒரு அசாதாரண பாரம்பரியத்தை விட்டுச் சென்றனர், மேலும், அதிகாரங்களுக்கு எதிராக கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி சுதந்திரம் அடைவது, அதேநேரம், அவ்வாறு செய்ததற்காக இருவருமே தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டு கொண்டாடப்படும் போது முரண்பாடான விஷயம் என்னவெனில், ​​காந்தி மற்றும் பகத் சிங் இருவரின் முக்கிய இலட்சியங்கள் நரேந்திர மோடி ஆட்சியில் நிராகரிக்கப்பட்டுள்ளன, மேலும், கருத்து வேறுபாட்டின் கலாச்சாரத்தை நிலைநிறுத்துபவர்கள் அதிக அதிர்வு மற்றும் வீரியத்துடன் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். காந்தியும் பகத்சிங்கும் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர்களை ஆந்தோலன் ஜீவிகள் என்று அழைத்து ஆளும் அரசு அவர்களையும் சிறையில் அடைத்திருப்பார்கள்.

செப்டம்பர் 7, 1924 அன்று, காந்தி நவஜீவனில் எழுதினார், "... அரசாங்கத்தை விமர்சிப்பது தேசத்துரோகமாக கருதப்பட்டது, மேலும் யாரும் உண்மையை பேசத் துணியவில்லை." தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A (தேசத்துரோகம்) மாணவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் எதிரொலிக்கிறது.

உண்மையில், ​​ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக பணியாற்றிய போது, 2019 ல் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தேசத்துரோக விதிமுறை பலப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய காந்தி மற்றும் பகத் சிங் போன்ற நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட காலனித்துவ சகாப்தத்தை பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் இந்த அறிக்கைகள் நினைவூட்டுகிறது.

விமர்சனக் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இருவரும் எழுதியது குறிப்பிடத்தக்கது, இது இப்போது மோடி ஆட்சியில் அதன் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சி, 2014 முதல், இந்தியாவை ஒரளவு கருத்துச் சுதந்திரம் இல்லாத நாடாக மாற்றியதுடன், "தேர்தல் எதேச்சதிகாரம்" என்ற அங்கீகரிக்க முடியாத அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

காந்தி பல கோணங்களில் சுதந்திரத்தை வரையறுத்தார், அதில் மிகவும் உபதேசமான கண்ணோட்டங்களில் ஒன்று, துஷ்பிரயோகம் செய்யப்படும்போது அதிகாரத்தை எதிர்ப்பதற்கு சுதந்திரம் மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். ஜனவரி 29, 1925 அன்று, காந்தி யங் இந்தியாவில் எழுதினார், “உண்மையான ஸ்வராஜ் (சுதந்திரம்) என்பது ஒரு சிலரால் அதிகாரத்தைப் பெறுவதன் மூலம் அல்ல, அது துஷ்பிரயோகம் செய்யப்படும்போது அதை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறுவதன் மூலம் வருவது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் தங்கள் திறனை உணர்த்துவதன் மூலம் ஸ்வராஜ் பெறப்பட வேண்டும்.

23 வயதான புரட்சியாளரான, பகத் சிங் தனது உன்னதமான "நான் ஏன் நாத்திகன்" என்ற புத்தகத்தில் "இரக்கமற்ற விமர்சனம் மற்றும் சுயாதீன சிந்தனை ஆகியவை புரட்சிகர சிந்தனையின் இரண்டு தேவையான பண்புகள்." என்று எழுதினார். மேலும், "முன்னேற்றத்திற்காக நிற்கும் ஒவ்வொரு நபரும் பழைய நம்பிக்கைகளின் ஒவ்வொரு கோட்பாட்டையும் விமர்சிப்பது அவசியம்" என்றும் அவர் கூறினார்.

ஸ்வராஜ் மக்களுக்கு அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உள்ள திறனைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த காந்தி விரும்பினார். அதேநேரம் பகத்சிங்கின் கற்பனை செய்யப்பட்ட இந்தியா, முன்னேற்றத்திற்காக நிற்கும் ஒவ்வொரு நபரும் பழைய நம்பிக்கைகளின் ஒவ்வொரு கோட்பாட்டையும் விமர்சிக்க வேண்டும். அங்கு கருத்து வேறுபாடுகளை குற்றவாளியாக்குவதன் மூலமும் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இரக்கமின்றி கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துதல் மூலமும் கடுமையாக தாக்கப்பட வேண்டும்.

காந்தியும் பகத்சிங்கும் இந்தியாவுக்காக தியாகம் செய்தனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கான பகத்சிங்கின் போராட்ட முறை காந்தியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனால் அவர் ஒரு சிறந்த தேசபக்தர் மற்றும் தைரியமான இந்தியர் என்று காந்தி போற்றினார்.

பகத்சிங், படுகேஸ்வர் தத் ஆகியோருடன் சேர்ந்து ஜூன் 6, 1928 அன்று எழுதினார், "... தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், முக்கிய நீரோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், சுரண்டலுக்கு பலியாகிவிட்டனர் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது ... உற்பத்தி செய்யும் விவசாயிகள் பசியால் இறக்கின்றனர். மற்றவர்களுக்காக ஆடைகளை நெசவு செய்யும் நெசவாளர் தனது சொந்த குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் செய்ய முடியாது ... மேசன்கள், தச்சர்கள், பெரிய அரண்மனைகளைக் கட்டும் இரும்பு தொழிலாளர்கள் குடிசைகள் மற்றும் சேரிகளில் வாழ்ந்து இறக்கின்றனர். மறுபுறம், முதலாளித்துவ சுரண்டல் செய்பவர்கள், சமூக விரோதிகள், அவர்களின் ஃபேஷன் மற்றும் இன்பத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகிறார்கள். என்று எழுதினார்.

இன்று, மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் சுதந்திர இந்தியாவில் முன்னோடியில்லாத மக்கள் இயக்கமாகும், இந்த போராட்டம் பிஜேபி-ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைந்த சர்வாதிகார ஆட்சியை சவால் செய்கிறது.

இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வில் காந்தியால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது பகத்சிங்கின் ஆன்மா முழுவதும் பரவியது என்று கோபாலகிருஷ்ண காந்தி ஒருமுறை எழுதினார். அந்த தீர்மானத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பற்றி பேசப்பட்டது மற்றும் உற்பத்தி வழிமுறைகள் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களிடம் இல்லாமல் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறியது.

இன்று, தேசிய சொத்துக்களை பணமாக்குதல் என்ற பெயரில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை முற்றிலும் புறக்கணித்து, மோடி அரசு இந்த சொத்துக்களை பெரும் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறது.

அரசியலமைப்பை உருவாக்கும் போது, ​​பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்பதை சரியாக வலியுறுத்தினார், இதில் ஒன்று, குடிமக்களான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமாக போதுமான வாழ்வாதாரத்தை சம்பாதிக்க உரிமை உண்டு; இரண்டு, சமூகத்தின் பொருள் வளங்களின் உரிமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை பொது நலனை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் விநியோகிக்கப்பட வேண்டும்; மற்றும் மூன்று, பொருளாதார அமைப்பின் செயல்பாடு செல்வத்தின் செறிவு மற்றும் உற்பத்திக்கு பொதுவான தீங்கு விளைவிக்காது.

பகத் சிங் மற்றும் காந்தியின் பிறந்தநாளை நாம் கொண்டாடும் அதே வேளையில், அவர்களின் அர்ப்பணிப்பின் உணர்வை மீண்டும் பெறுவது அவசியம். இந்திய அரசு மதச்சார்பற்ற மற்றும் பொதுநலவாதி என்ற, அம்பேத்கரின் வரையறையை வலியுறுத்துவதும் அவசியம், இது தற்போதைய ஆளும் அரசால் சிதைக்கப்படுகிறது. இந்த நிலைமை அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் கூட்டமைப்பானது, கூட்டு-வகுப்புவாத பாசிச தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை கோருகிறது.

இந்த கட்டுரை முதன்முதலில் அச்சு பதிப்பில் செப்டம்பர் 26, 2021 அன்று ‘கொண்டாட்டம் ஆனந்தோலன் ஜீவிஸ்’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Modi Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment