வானியலாளர்கள் பால்திரளை ஒட்டிய விண்மீன் மண்டலத்தில் கடந்த திங்களன்று “needle in a haystack” என்று அழைக்கப்படும் அரியவகை கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இயல்பாக நட்சத்திரத்தின் வெடிப்பில் இருந்து கருந்துளை பிறக்கிறது. ஆனால் இது அவ்வாறு இல்லாமல் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கருந்துளை மற்ற அனைத்து அறியப்பட்ட கருந்துளைகளிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. சக்திவாய்ந்த எக்ஸ்ரே கதிர்வீச்சை வெளியிடுவில்லை என்றும் சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்பில் இருந்து பிறக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
கருந்துளைகள் ஈர்ப்பு விசையுடன் கூடிய கடினமான ஒன்று, ஒளி கூட வெளியேற முடியாது என்கின்றனர். இந்த புதிய கருந்துளை சூரியனை விட ஒன்பது மடங்கு கனமானது.பெரிய மாகெல்லானிக் கிளவுட் கேலக்ஸியின் டரான்டுலா நெபுலா பகுதியில் கண்டறியப்பட்டது. மேலும், பூமியிலிருந்து சுமார் 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
டார்மெண்ட் கருந்துளைகள் கண்டறிவது கடினம், ஏனெனில் சுற்றுப்புறங்களுடன் மிகக் குறைவாகவே தொடர்பில் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் பலரும் இதனால் ஆய்வை நிறுத்தி உள்ளனர்.
"அந்தப் பொருட்களைக் கண்டுபிடிப்பது சவாலானது" என்று ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக வானியல் துறை ஆராய்ச்சியாளர், டோமர் ஷெனார் கூறினார். வானியல் வல்லுநர்கள் பல ஆண்டுகால தேடலில் கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை இதுவாகும் என வானியலாளர் கரீம் எல்-பத்ரி கூறியுள்ளார்.
சிலியை மையமாக கொண்ட ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கியை ஆராய்ச்சியாளர்கள் இதற்கு பயன்படுத்தியுள்ளனர். கருந்துளைகள் பல்வேறு வகைகள் உள்ளன. புதிதாகக் கண்டறியப்பட்டதைப் போன்று சிறியதும் உள்ளன. பாரிய தனிப்பட்ட நட்சத்திரங்களின் வீழ்ச்சியால் உருவாகும் நட்சத்திர-நிறை கருந்துளைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இடைநிலை-நிறை கருந்துளைகள் மற்றும் சூப்பர்மாசிவ் கருந்துளைகள் பெரும்பாலானவை விண்மீன் திரள்களின் மையத்தில் உள்ளன.