இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது முதல் போட்டியில் மோதுகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பழையனவை தோனியும் மறக்கவில்லை, சென்னை சூப்பர் கிங்ஸும் மறக்கவில்லை என்பதற்கு, இந்த ஆந்தமே ஒரு சான்று!.