ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் ஆர்வி ராகுல் 85 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.
இதில் இந்தியா இதுவரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தில் இருந்தது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தி இருந்தார்.
இந்த நிலையில், 85 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் ஆர்வி ராகுல், மொத்தம் 338கிலோ எடை தூக்கி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம், இந்தியா இப்போது 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளது.
தங்கம் வென்ற ராகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.