தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று(ஜன.5) அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.
தன் திறமைக்கான உயரத்தை எட்டாமலேயே ஓய்வு அறிவித்த இர்பான் பதான்! (வீடியோ)
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. மழை நின்ற பிறகு, பிட்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. மீண்டும் மழை பெய்து ஓய, வேக்குவம் கிளீனரை வைத்து ஆடுகளத்தை காய வைக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அதன் பிறகு அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர், வேக்குவம் கிளீனர் மூலமும் ஆடுகளத்தை உலர வைக்க முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும், பிட்சை குறிப்பிட்ட நேரத்திற்குள் தயார் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
தனது எதிர்காலத்தோடு இந்திய அணியின் எதிர்காலம்! ரொமான்ஸ் புகைப்படங்கள்
இந்நிலையில், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம், பிட்சை உலர்ப்படுத்த முடியை உலர வைக்கும் ஹேர் டிரையர், துணியை அயர்ன் செய்யும் அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறார்களே! இந்தியாவின் அந்த ஹேர் டிரையர் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
1980 – will have flying cars in 2020
2020 – drying pitch with hair dryer #INDvSL pic.twitter.com/H6EM1zQwzm
— sarcastic_dude (@_dhamo) January 5, 2020
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, “இன்னொரு முறை இப்படி நடக்காது என நம்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Hopefully this won’t happen again. #IndvsSL
— Harsha Bhogle (@bhogleharsha) January 5, 2020
Is this the best of Indian ground technology? Embarrassing pic.twitter.com/M6XVX5UFll
— Rodders7s (@Rodfather73) January 5, 2020
Richest Cricket board in the world but still Groundstaff use hair dryer and iron box to dry the pitch? What’da @BCCI ?????♂️
Embarrassing #Guwahati #INDvSL— Selvam (@AGR_Selvam) January 5, 2020
குறிப்பாக, வேக்குவம் கிளீனர் பயன்படுத்தி பிட்சை உலர வைக்கும் பணியை கவனித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியே அதிர்ச்சி அடைந்து அது குறித்து கேட்டறிந்தார்.
Shame. It’s shame. Virat Kohli surprised to see at Assam Cricket Association using Hair dryer, Iron, Vacuum cleaner to dry the pitch of Barsapara Stadium at Guwahati. And match #INDvSL finally declared abandoned. pic.twitter.com/DtZO0sNusV
— Nandan Pratim Sharma Bordoloi ???????? (@NANDANPRATIM) January 5, 2020
இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜன.7) இந்தூரில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3வது டி20 போட்டி புனேவில் ஜன.10ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.