Advertisment

மற்ற நாடுகளுக்கு உதவுவதில் பி.சி.சி.ஐ திறந்த மனதுடன் இருக்கும் என நம்புகிறேன்: சச்சின் டெண்டுல்கர்

எனது கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sachin Tendulkar, Happy Birthday Sachin Tendulkar, Master Blaster

Sachin Tendulkar, Happy Birthday Sachin Tendulkar, Master Blaster

Sachin Tendulkar : உலகம் முழுவதும் பூட்டப்பட்டுள்ள நேரத்தில், சர்வதேச கிரிக்கெட் இல்லாததால் ஒவ்வொரு கிரிக்கெட் தேசத்திற்கும் இதற்கு தீர்வு காண சொந்த பிரச்சினைகள் இருக்கும், என்று சச்சின் டெண்டுல்கர் கூறுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், தொற்றுநோயால் விளையாட்டு எவ்வாறு மாறக்கூடும், என்பதைப் பற்றிக் கூறினார்.

Advertisment

விளையாட்டு மீண்டும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

இந்த விஷயங்கள் அனைத்தும் எந்த சந்தேகமும் இல்லாமல் மாறப்போகின்றன. வீரர்கள் சமூக தூரத்தை அறிந்திருப்பார்கள், மேலும் ஒரு விக்கெட் எடுத்த பிறகு ஹை-பை போட்டு கொண்டாடுவதில் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு போட்டி விளையாடும்போது ஸ்டாண்டுகள் காலியாக இருக்கக்கூடும், என்பதைக் கேட்டேன். பார்வையாளர்களிடமிருந்து தான் எனெர்ஜி கிடைக்கும். அதனால் வீரர்களை சரிசெய்வது நிச்சயமாக எளிதல்ல. முதலில் விளையாடுவது பாதுகாப்பானதா என்பது குறித்து எங்களுக்கு அரசாங்க அனுமதி தேவைப்படும். இதில் மிக முக்கியமான விஷயம் உயிர்களைக் காப்பாற்றுவது தான்.

பல கிரிக்கெட் நாடுகளின் எதிர்காலம் இருண்டதாக இருப்பதால் இந்திய கிரிக்கெட் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஜிம்பாவே, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளும் இந்த முடக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.

எல்லோரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கேள்விக்கு பி.சி.சி.ஐ பதிலளித்தால் தான் பொருத்தமாக இருக்கும். ஆனால் பி.சி.சி.ஐ.யின் கெப்பாசிட்டி என்னவென்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக தீர்வு காண அதன் சொந்த பிரச்சினை பல இருக்கும்.

கிரிக்கெட்டின் பிரெசிடெண்டாக பி.சி.சி.ஐ இருக்கும் போது, கிரிக்கெட்டின் உலகளாவிய போராட்டத்தை முன்னெடுப்பதில் பெரிய பங்கு வகிக்க வேண்டுமா?

நீங்கள் மற்ற போர்டுகளைப் பார்த்தால், கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ளது தெரியும். இது கிரிக்கெட்டின் முடிவு அல்ல. கிரிக்கெட் முடிவுகள் களத்தில் எடுக்கப்படுகின்றன. குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அவர்களும் உதவ விரும்புகிறார்கள். இந்நிலையில், நீங்கள் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த நேரத்தில் எல்லோரும் உதவுவார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் (கங்குலி) குழுத் தலைவராக இருக்கிறார், அவர் கிரிக்கெட் விளையாடியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இந்த அழைப்பை வாரியத் தலைவராக ஏற்றுக்கொள்வார்.

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கூட பாதிக்கப்படுவார்களே...

ஆம். இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இப்போது யாரும் இதைப் பற்றி யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். எல்லோரும் வைரஸை விரட்டுவதில் தான் முனைப்புடன் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா உதவி செய்யும் நிலையில் இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

(ரோஜர்) பெடரர், (ரஃபேல்) நடால் மற்றும் (நோவக்) ஜோகோவிச் ஆகியோர் முதல் 100 பேரில் இல்லாத டென்னிஸ் வீரர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசியுள்ளனர். கிரிக்கெட் கூட இது போன்ற ஒன்றை செய்ய வேண்டும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

எல்லாமே அங்குள்ள தனிநபர்களை (டென்னிஸில்) பொறுத்து தான். இங்கே உரிமைகள் இருந்தாலும், அதை தீர்மானிக்க ஒரு குழு உள்ளது. வீரர்கள் குறிப்பிட்ட அளவிற்கு நிர்வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். டென்னிஸ் மற்றும் அதில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் அல்லது ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த சவால்கள் இருக்கும். நாங்கள் முயற்சி செய்து உதவுவோம். எங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவக்கூடிய நிலையில் பி.சி.சி.ஐ இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு சில சிறந்த நாடுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் வளருமா?

உரிமையாளர் (ஃப்ரான்சைஸ்) கிரிக்கெட் அதன் டி 20 பதிப்பின் காரணமாக வளரும். இது பெரும்பாலான குடும்பங்களில் பிரபலமாக உள்ளது. டி 20 என்பது ஒருவர் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடிய ஒன்று, மூன்று மணி நேரத்தில் விளையாட்டு முடிந்து விடும்.

இந்த வைரஸைப் பற்றி மற்றவர்களைப் போல நீங்களும் பயப்படுகிறீர்களா?

சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒருவர் அலட்சியமாக இருந்தாலும் அல்லது ‘எனக்கு எதுவும் நடக்காது’ என்ற மனப்பான்மை இருந்தாலும், அந்த அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கடைசியில் மன்னிப்பு கேட்பதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது. இது எல்லாமே சுகாதாரத்தை பொறுத்து தான். யுனிசெப் தூதராக, கைகளை கழுவுவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் தொடர்ந்து மக்களுக்கு சொல்லி வருகிறேன். எனது நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்று திட்டமிட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் வரை மட்டுமல்லாமல், பிற நேரங்களிலும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. நான் என் உதவியை நிறுத்த விரும்பவில்லை. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Sachin Tendulkar Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment