பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரை இந்தியாவில் பெரியளவில் பிரபலப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதன் முயற்சியாக, பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி 'கனா' படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரி சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
'புலியே புலியை படம் பிடித்தத் தருணம்’ - வைரலாகும் தோனியின் படம்!
இது தொடர்பாக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், "இதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த முறை அதுவும் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 'கனா' என்ற படத்தைத் தயாரித்ததே, பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துதான்.
One week until @T20WorldCup! Our #LedByWomen countdown is back with a very special guest - Tamil film star @Siva_Kartikeyan! A man who loves his #cricket, and we thank you very much for being involved in the #LetsMakeHerstory campaign! pic.twitter.com/y1P897T69P
— Aus Consulate Chennai (@AusCGChennai) February 14, 2020
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் தனிப்பட்ட அணிக்கு சப்போர்ட் பண்ணுவதை விட, அனைத்துப் பெண்களுக்கும் சப்போர்ட் பண்ண வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக ஆஸ்திரேலியத் தூதரகம் இதற்காக பெரிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. #LedByWomen மற்றும் #LetsMakeHerstory ஆகிய இரண்டு வார்த்தைகளைப் படிக்கும் போதே உத்வேகம் அளிக்கிறது.
தொடங்கியது 'ஷா - கில்' விவாதம் : டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஓப்பனர் யார்?
இந்தப் போட்டியில் விளையாடும் அனைத்துப் பெண்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என நம்புகிறேன்" என்று பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.