இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 80 ரன், மேக்ஸ்வெல் 54 ரன், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன் எடுத்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டையும், ஷர்துல் தாக்கூர், நடராஜன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 85 ரன் எடுத்தார்.
3 விக்கெட்டை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் Mitchell Swepson ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது.
நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்க உள்ளது.