Advertisment

சாம்பியன்ஸ் டிராஃபி: இந்திய அணி அறிவிப்பு! ரெய்னா எங்கே?

இது அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட அணி. தான். ஆனால்.....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாம்பியன்ஸ் டிராஃபி: இந்திய அணி அறிவிப்பு! ரெய்னா எங்கே?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்கின்றன.

Advertisment

முன்னதாக, வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டிய காலக் கெடுவும்(ஏப்ரல் 25 ,2017) முடிந்து நிலையில், பிசிசிஐ இந்திய வீரர்கள் பட்டியலில் அறிவிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) போட்டிகளில் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் தான், இந்திய அணியை அறிவிப்பதில் பிசிசிஐ காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

என்னதான் பிரச்சனை?

ஐசிசி சில மாற்றங்களைத் தற்போது கொண்டு வந்துள்ளது. அதாவது, தனது நிதியமைப்பு மற்றும் நிர்வாகக் குழுவில் தான் ஐசிசி இந்த மாற்றங்களை செய்துள்ளது. இதனால், கிரிக்கெட் உலகில் 'தி பிக் 3' என்றழைக்கப்படும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்களின் தற்போதைய செல்வாக்கு மற்றும் வருமானத்தின் அளவுகள் கடந்த காலங்களை விட குறையும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த புதிய மாற்றத்திற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, பிசிசிஐ மட்டும் ஆரம்பம் முதலே இந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து வந்ததாம். இதனால், ஐசிசி-க்கும் பிசிசிஐக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 24, 2017ல் துபாயில் நடந்த ஐசிசி கூட்டத்தொடரில், பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் சிஇஓ ராகுல் ஜோரி ஆகியோர் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். அப்போது, புதிய நிதியமைப்பு குறித்து விவாதம் செய்த போது, உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், மற்ற கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவுடன் அந்த தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இருந்தே, நடப்பு சாம்பியனான இந்தியா வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஐசிசி மூலம் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளின் மூலம், வருங்காலங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் வருமானம் ஈட்ட உள்ள தொகை 570 மில்லியன் டாலர்கள். ஆனால், ஐசிசி-ன் புதிய நிதியமைப்பு பகிர்வு விதிமுறைகளின்படி, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பிசிசிஐ பெறப்போகும் வருமானம் 290 மில்லியன் டாலர்கள் வரை குறையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணி விவரம்:

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்திய அணி பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே, மஹேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முஹமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இது அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட அணி தான். ஐபிஎல்-ல் கலக்கிய சில புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது மிக முக்கியத் தொடர் என்பதால், புதிய முகங்களுக்கான சரியான வாய்ப்பாக, இத்தொடர் அமைவதில் சிக்கல்கள் இருப்பதை மறுக்கமுடியாது.

ஆனால், அதிர்ச்சி தரும் விஷயமாக சுரேஷ் ரெய்னாவிற்கு இத்தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல், சிறப்பான ஃபார்மில் இருக்கும் கம்பீருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. தொலைநோக்குப் பார்வை திட்டத்தின் கீழ் கூட கம்பீரை விட்டுவிடலாம். ஆனால், அதிரடி பேட்ஸ்மேனும், சிறந்த ஃபீல்டருமான ரெய்னா எங்கே??

Virat Kohli Icc Champions Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment