நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டி கூத்தில் இதுவும் ஒன்று.
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற சென்னை vs மும்பை இறுதிப் போட்டியில், மும்பை இன்னிங்ஸின் போது கடைசி ஓவரை டுவைன் பிராவோ வீசினார்.
இதில், முதல் 3 பந்துகளுக்கும் பொல்லார்ட் ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே நகர்ந்து வர, பிராவோ ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வைடாக வீசினார். இதனால், அம்பயர் வைட் கொடுக்கவில்லை.
மேலும் படிக்க - டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்
பொறுத்துப் பொறுத்த பார்த்த பொல்லார்ட், அம்பயர் வைட் கொடுக்காத விரக்தியில், பிராவோ நான்காவது பந்தை வீச வரும் முன்பே, ஆஃப் சைடுக்கு வெளியே பல அடி தூரம் நகர்ந்து சென்று நின்று பேட்டிங் செய்தார்.
இதையடுத்து, இரு கள நடுவர்களும் பொல்லார்டை அழைத்து எச்சரித்தனர்.
பரபரவென சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தில், பொல்லார்டின் இந்த செயலை காமெடியாக எடுத்துக் கொள்வதா அல்லது சிறுபிள்ளைத்தனமாக எடுத்துக் கொள்வதா அல்லது இந்த சீசன் முழுக்க பல புவர் அம்பயரிங்கில் ஈடுபடும் அம்பயர்களை நினைத்து வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.