Advertisment

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேரி கோம்!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேரி கோம்!

வியட்நாம் நாட்டின் ஹோ -சீ-மின் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில், இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம், ஜப்பானின் சுபாசா கோமுராவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கத்திலிருந்து இருவரும் நிதானமாக தற்காப்பு ஆட்டத்தையே கடைபிடித்தனர்.

ஆனால், இரண்டாவது ரவுண்டில் இருந்து மேரி கோம் தனது அதிரடியைத் துவக்கினார். அவரை சமாளிக்க முடியாமல் சுபாசா திணறினார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் மேரிகோம், ஜப்பான் வீராங்கனை சுபாசாவை துவம்சம் செய்தார். வெற்றி பெற்ற மேரிகோம் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

காலிறுதி ஆட்டத்தின் தனி நபர் பிரிவுகளில் மற்ற இந்திய வீராங்கனைகளும் மிகச்சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

தற்போது ராஜ்ய சபா எம்.பியாக மேரிகோம் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Mc Mary Kom
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment