Advertisment

ஒடிசா கிளப்புக்கு 'பை' சொன்ன சென்னை வீரர்: கால்பந்து லேட்டஸ்ட் அப்டேட்

ஃபார்வர்ட் வீரர் நந்தகுமார் சேகர் ஒடிசா எஃப்சி அணியில் இருந்து விடைபெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nandhakumar Sekar leaves Odisha FC Tamil News

Nandhakumar Sekar Odisha FC

Nandhakumar Sekar leaves Odisha FC Tamil News: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடருக்கான ஒடிசா எஃப்சி அணியில் ஃபார்வர்ட் வீரராக விளையாடி வருபவர் நந்தகுமார் சேகர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 2019 முதல் ஒடிசா எஃப்சி அணியில் இணைந்தார். இதுவரை அந்த அணிக்காக 4 சீசன்களில் விளையாடியுள்ள அவர் 59 போட்டிகளில் 7 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 5 கோல்களுக்கு உதவியுள்ளார்.

Advertisment

2022-23 சீசனில் அவர் அணியின் முக்கிய வீரராக இருந்தார். அந்த சீசனில் 7 கோல்கள் மற்றும் ஒரு கோல் அடிக்க உதவி என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த சீசனில் ஒடிசா அணி ஹீரோ சூப்பர் கோப்பையை வென்று அசத்தியது. ஒடிசா அணி வென்ற முதல் கோப்பையாகவும் இருந்தது.

publive-image

நந்தகுமார் சேகரின் சிறப்பான ஆட்டத்திற்கு வெகுமதியும் கிடைத்தது. அவர் இந்திய தேசிய அணிக்கான அழைப்பை பெற்றார். ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை மற்றும் SAFF சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் 27 பேர் கொண்ட அணியில் 27 வயதான அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நந்தகுமார் சேகர் ஒடிசா எஃப்சி அணியில் இருந்து விடைபெறுவதாக அந்த அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா எஃப்சி அணி அதன் ட்விட்டர் பக்கத்தில், "நம்மில் ஒருவர்" என்ற சொல் பெரும்பாலும் அற்பமாக பயன்படுத்தப்படுகிறது. இது எண்ணற்ற உணர்ச்சிகள் மற்றும் நிரந்தரமான பிணைப்புகளை பிரதிபலிக்கிறது.

எனவே நந்தா "நம்முடையவர்" என்று பெருமையுடன் அறிவிக்க நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம். அவர் எங்கள் பையன், எங்கள் நண்பர் மற்றும் எங்கள் சகோதரர்.

எங்களுடைய பேட்ஜுக்கான அனைத்தையும் அவர் எப்போதும் கொடுத்திருக்கிறார். அவர் காயங்களுடன் விளையாடி, தனிப்பட்ட பிரச்சனைகளை ஒரு பக்கம் வைத்து, எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், கிளப்பின் ஒவ்வொரு உறுப்பினரையும் எப்போதும் புன்னகையுடன் வரவேற்றார்.

publive-image

இந்த ஆண்டு, அவர் எல்லாவற்றையும் கொடுத்தார். நினைவுகள் முடிவற்றதால் விடைபெறுவது கடினம். அவர் ஒடிசா எஃப்சியில் தங்கியிருந்ததை ஒரு கோப்பையுடன் குறிக்க முடிந்தது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இறுதியில், நாம் சேகரிக்கக்கூடியது என்னவென்றால், “நன்றி! நன்றாகப் போய் வாருங்கள்!".

நந்தா, நீங்கள் எப்பொழுதும் ஜாகர்நாட் (பெரிய சக்தி) மற்றும் கலிங்க வீரர். ஒடிசா எஃப்சி எப்போதும் உங்கள் வீடாக இருக்கும்." என்று பதிவிட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment