Advertisment

பவன் ஷெராவத் பலத்த காயமா? '2-3 நாளில் அணிக்கு திரும்புவார்' என பயிற்சியாளர் நம்பிக்கை

pawan sehrawat injury latest update in tamil: குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pawan sehrawat injury update Tamil News

Pawan Sherawat Injury update in tamil:’ Pawan Will Be Back’ Coach Udaya Kumar Assures

Pawan sehrawat injury update Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக கபடி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் அரங்கேறியது. பெங்களூரு கண்டிவாரா உள் விளையாட்டரங்கத்தில் இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

Advertisment

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி வாய்ப்பில் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் குஜராத் அணியினர் சிறப்பாக விளையாடி புள்ளிகள் எடுத்தால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 31-31 என்ற கணக்கில் இருந்தன. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

நட்சத்திர வீர பவன் ஷெராவத் காயம்

இந்த ஆட்டத்தின் போது தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு காயம் ஏற்பட்டது. குஜராத் அணி வீரரை அவர் பிடிக்க முயன்றபோது அவரது வலது முழங்கால் அப்படியே முடங்கியது. இந்த பலத்த காயத்தால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் போட்டியைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியளித்தது. மேலும் தமிழ் தலைவாஸ் அணியினர் அப்படியே உறைந்தனர்.

பயிற்சியாளர் நம்பிக்கை

இந்நிலையில், பவன் ஷெராவத்தின் காயம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் காயம் தொடர்பாக பேசியுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதய குமார், 'பவன் இன்னும் 2-3 நாட்களில் அணிக்கு திரும்புவார்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

9வது சீசனுக்கான ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி பவன் செஹ்ராவத்தை லீக் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரது வருகை ரெய்டிங் பிரிவில் மற்ற அணிகளுக்கு கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த காயத்தில் மீள்வார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment