செஸ் ஒலிம்பியாட் தொடரின் 9வது சுற்றில் பிரக்ஞானந்தாவின் அசத்தல் ஆட்டத்தால், ஆடவர் இந்திய பி அணி தோல்வியிலிருந்து தப்பியது.
இந்திய ஆடவர் ’ஏ’ அணி, பிரேசில் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் ஹரி கிருஷ்ணா மற்றும் விதித் சந்தோஷ் டிராவை சந்தித்தனர். இந்நிலையில் தமிழக வீரர் சசி கிரண் வெற்றுபெற்று தனது அணிக்கு முன்னிலை உருவாக்கி கொடுத்தார். மேலும் அர்ஜீன் தங்களது எதிராளிகளை சரியாக கையாண்டதன் மூலம் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய ஆடவர் பி அணி 9 வது சுற்றில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. குகேஷ் மற்றும் நிஹல் சரின் அதிக நேரம் போராடி போட்டியை டிராவில் முடித்தனர். இந்நிலையில் 9வது சுற்றில் தோல்வியின் பிடிலிருந்து தங்களது அணியை காப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பிரக்ஞானந்தா இருந்தார். இவர் யோசித்து விளையாடினார். தனது 66-வது நகர்த்தலில் அஜர்பைஜான் வீரர் வசிஃப்-ஐ வீழ்த்தினார். இந்நிலையில் இந்த போட்டி 2-2 இந்திய பி எணி டிரா செய்தது. இதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பு தக்க வைக்கப்பட்டது.
மகளிர் அணியை பொறுத்தவரை 9 வது சுற்றில் இந்திய 'ஏ' அணி, போலந்து அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியில், கொனேரு ஹம்பி, ஹரிகா மற்றும் தான்யா ஆகியோர் போட்டியை டிரா செய்தனர். இதனால், தமிழக வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி, வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவரை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை ஒலிவியா, 80-வது நகர்தலில் வெற்றிபெற்றார். இதனால், இந்திய மகளிர் 'ஏ' அணி, தனது முதல் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது போட்டி பட்டியலில் உஸ்பகிஸ்தான் 16, அர்மேனியா, இந்தியா பி அணி 15 மற்றும் நெதர்லாந்து மற்றும் அசர்பைசான் 14 மற்றும் இந்தியா ஏ அணி 14 ஆகிய புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறது.