புரோ கபடி தொடரின் சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் 24-29 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வி சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
9 போட்டிகளில் விளையாடியுள்ள 3 வெற்றிகளும், 4 தோல்விகளும் பெற்று 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி, 7வது இடத்தில் உள்ள யு மும்பா அணியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 24-29 என்ற புள்ளிகணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வியால், அரங்கமே ரசிகர்களின் கண்ணீர் கடலில் தத்தளித்தது.