இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக் கோப்பையில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ள அணியுடன் டிராவிட் உடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்த இந்திய அணி இன்று அமீரகம் புறப்பட்டு சென்றது. ஆனால் டிராவிட் மட்டும் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ராகுல் டிராவிட் இல்லாமல் இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையில் டிராவிட்டிற்கு மாற்றாக வி.வி.எஸ்.லக்ஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.